| மன்று மா மயேந்திரத் தலத்து வந்ததால். |
இசை -புகழ் 3-2 369. | தாழந்த மா தவத்து உலோகசாரங்கன் உறையும் சாரல் வீழ்ந்தனென்; சிறைகள் தீய, வெவ்வுயிர்த்து, உளமும் மெய்யும் போழ்ந்தன துன்பம் ஊன்ற, உயிர்ப்பொறை போற்றகில்லாது, ஆழ்ந்தனென்; ஆழ்ந்த என்னை அருந் தவன் எதிர்ந்து தேற்றி; |
போழ்ந்தன துன்பம் -பிளப்பனவாகிய துன்பம்; உயிர்ப்பொறை - உயிர்ச்சுமை. 56-1 370. | ' ''கற்றிலார் போல உள்ளக் களிப்பினால் அமரர் காப்பூடு உற்றிடக் கருதி, மீப் போய், ஆதபத்து உனது மேனி முற்று அழல் முருங்க, மண்ணை முயங்கினை; இனி என்? சில் நாள் மற்று நின் உயிரை ஓம்பாது இகழ்வது மாலைத்து அன்றால். |
மீ -மேலே;ஆதபம் -வெயில்;முருங்க -எரிய;மாலைத்து அன்று-இயல்பு அன்று 56-2 371. | ''களித்தவர் கெடுதல் திண்ணம்; சனகியைக் கபடன் வவ்வி, அன்று ஒளித்த வாய் துருவி உற்ற வானரர், இராம நாமம் விளித்திட, சிறை வந்து ஓங்கும்; வெவ்வுயிர்த்து அயரல்'' என்று, அளித்தனன்; அதனால் ஆவி ஆற்றினேன் - ஆற்றல் மொய்ம்பீர்! |
அயரல் -தளராதே;அளித்தனன் -அருளினான். 56-3 372. | 'அன்றியும், அலருள் வைகும் அயனைநேர் முனிவர், வாய்மை |
|