| நன்றிகொள் ஈசற் காண்பான் நணுகலும், வினையேன் உற்றது ஒன்று ஒழிவுறாமல் கேட்டு, அது யோகத்தின் உணர்ச்சி பேணி, ''பொன்றுதல் ஒழிமின்; யானே புகல்வது கேண்மின்'' என்றான். |
அயனை நேர் முனிவன் -நான்முகனை ஒத்த உலோக சாரங்க முனிவன் 56-4 373. | ' ''தசரத ராமன் தேவர் தவத்தினால், தாய் சொல் தாங்கி, கச ரத துரகம் இன்றிக் கானிடை இறுத்த காலை, வசை தரும் இலங்கை வேந்தன் வவ்விய திருவை நாடித் திசை திரி கவிகள் உற்றால், சிறகு பெற்று எழுதி'' என்ன, |
கச, ரத, துரகம் -யானை, தேர், குதிரை;கவிகள் -குரங்குகள் 56-5 374. | 'எனக்கு உணவு இயற்றும் காதல் என் மகன் சுபார்சுபன் பேர் சினக் கொலை அரக்கன் மூதூர் வடதிசைநின்று செல்வான், நினைக்கு முன் திருவோடு அந்த நீசனை நோக்கி, ''எந்தை - மனககு இரை எய்திற்று'' என்னா, சிறகினால் தகைந்து கொண்டான். |
தகைந்து -மோதி 58-1 375. | காமத்தால் நலியப்பட்டு, கனங்குழைதன்னைக் கொண்டு போம்மத்தா! போகல்; எந்தை புன் பசிக்கு அமைந்தாய்'' என்று, தாமத் தார் மௌலி மைந்தன் தடுத்து இடை விலக்க, நீசன் |
|