பக்கம் எண் :

மிகைப் பாடல்கள்727

 நாமத்தால் விரலைக் கவ்வ, நாணி
      மீண்டு, எனக்குச் சொன்னான்.'

     மத்தா -உன்மத்தனே;போகல் -போகாதே;நாமத்தால் -
அச்சத்தால்                                                58-2

376.முன்னர் அந் நிசாகர
      முனி மொழிந்ததும்,
பின்னர் அச் சுபார்சுபன்
      பெலத்து இராவணன் -
தன்னொடும் அமர் பொரச்
      சமைந்து நின்றதும்,
கொன் இயல் சனகியைக்
      கொண்டு போனதும்,

     பெலத்து -வலிமையுடைய (பலம்);கொன் இயல் -பெருமைப் பண்பு
                                                           58-3

377. நினைந்து சம்பாதியும், நீதி யாவையும்
இனைந்தனன், வானரர் எவரும் கேட்கவே;
நினைந்து, கண்ணீர் விழ, நெடிது உயிர்த்தனர்;
வினைந்தனர், புரண்டனர்; விதியை நொந்தனர்.

     இனைந்தனன் -வருந்தினான்                             58-4

16.  மயேந்திரப் படலம்

378.புள்ளரசு இன்ன வாய்மை சொல்லி
      விண் போந்த பின்னர்,
தெள்ளிதின் உணர்ந்தார் யாரும்; அங்கு
      அது சாம்பன் சிந்தித்து,
உள்ளவர் தன்னில் வல்லார் யார்
     என உன்னி, யாண்டும்
தள்ளரும் புகழோன் வாயுத்
      தனையனை நோக்கிச் செப்பும்:

     புள்ளரசு -பறவைகளுக்கு அரசனான சம்பாதி;வாயுத் தனையன் -
வாயுவின் மகனாகிய அனுமன்.

379. ஆயவன் அங்குப் போகிய
     பின்னர், அகமீதே
நோய் உறு தன்மைத்து
      ஆகிய வீரர்தமை நோக்கி,