பக்கம் எண் :

728கிட்கிந்தா காண்டம்

 தூய மனத்தன் ஆகிய
      வாலி தரு தொன்மைச்
சேயும் அவர்க்கே செப்பினன்,
     நாடும் செயல் ஓர்வான்.

     சேய் -மகன் (இங்கே அங்கதன்) (இப் படலத்தின் முதற் பாடலாக ஓர்
ஏட்டில் 'புள்ளரசு' எனத் தொடங்கும் பாடலும், பிறிதோர் ஏட்டில் 'ஆயவன்'
எனத் தொடங்கும் பாடலும் காணப்பட்டது.)

380.'ஆரியன் மின்னி்ன் பேர்
     எழில்கூறும் அமைவாலும்,
''காரியம் உன்னால் முற்றும்''
      எனச் சொல் கடனாலும்,
மாருதி ஒப்பார் வேறு இலை
      என்னா, மனம் எண்ணி,
சீரியன் மல் தோள் ஆண்மை
     உரைத்தால் செயும், என்றே'

     மின்னின் -மின்னல் போல்வளாகிய சீதை.                   8-1

381. நாலு மறைக்கும் வேலியும்
      ஆகி, நடு நிற்கும்
சீலம் மிகுந்தீர்! திங்கள்
     மிலைச்சித் திகழ் வேணி,
ஆல மிடற்றான்மேலும் உதித்தீர்!
      அது போதில்
காலின் நிறைக்கோ காலனும்
      ஆகக் கடிது உற்றீர்.

     திங்கள் மிலைச்சி -சந்திரன் சூடி;வேணி - சடை;
ஆலமிடற்றான் -நஞ்சினைக் கழுத்திலே கொண்ட சிவபிரான்        18-1

382.ஆதியர் இப் புத்தேள்
      அடிப்பாரித்து அணவு ஆதற்கு
ஓது கருத்தில் சால
      நினைத்திட்டு, ஒழிவு இல்லாப்
போது தளத்தில் புக்கிய
      செய்கைத் திறனாலே
சாதல் கெடுத்துத் தான்
      அழியாதீர் அதனாலே.

     பாரித்து -விரும்பி;அணவு ஆதற்கு -அணுகுவதற்கு       18-2