இந்தச்சத்துருவான அரக்கரைக் கொல்லாமல் வெறுமே சாகேன் என்பது பழையவுரை (அடை -பதி). (227) 5062. | “கண்ணியநாள் கழிந்துளவால்; கண்டிலமால்கனங்குழையை விண்ணடைதும்”என்றாரை ஆண்டுஇருத்தி விரைந்த யான், எண்ணியதுமுடிக்ககிலேன்! இனி முடியாதுஇருப்பேனோ ? புண்ணியம் என்றுஒருபொருள் என்னுழைநின்றும் போயதால். |
கண்ணியநாள் -(சுக்கிரீவனால்) குறிப்பிட்ட நாள்; கழிந்துள - கடந்தபடியுள்ளன; கனங்குழையை - சீதாபிராட்டியை; கண்டிலம் - கண்டோம் இல்லை (ஆதலால்); விண் அடைதும் - இறந்த விண்ணுலகத்தை அடைவோம்; என்றாரை - என்று கூறிய அங்கதன் முதலானவரை; ஆண்டு - அந்த மகேந்திரமலையில்; இருத்தி - உயிரோடு வாழச்செய்து; விரைந்த யான் - வேகமாக இலங்கையை அடைந்த யான்; எண்ணியது - கருதிய செயலை; முடிக்ககிலேன் - நிறைவேற்றினேன் இல்லை; இனி - இப்போது; முடியாது - இறவாமல்; இருப்பேனோ - உயிருடன் வாழ்வேனோ; புண்ணியம் என்று - அறம் என்று பேசப்படும்; ஒருபொருள் - ஒப்பற்ற பொருள்; என் உழைநின்றும் - என்பக்கத்திலிருந்து; போயது - நீங்கிவிட்டது. தர்மம் என்னும்புனிதப்பொருள் என்னை விட்டு நீங்கி விட்டது. கழிந்துளவால்,போயதால் என்பனவற்றில் உள்ள ஆல் அசை. கனங்குழை - ஆகுபெயர் என்பர் அழகர். அன்மொழித்தொகை என்பர் முனிவர். (228) 5063.. | ஏழு நூறுஓசனை சூழ்ந்து எயில்கிடந்தது இவ் இலங்கை வாழும் மா மன்உயிர், யான் காணாதமற்று இல்லை; ஊழியான்பெருந்தேவி ஒருத்தியுமேயான் காணேன் ஆழி தாய், இடர்- ஆழியிடையே வீழ்ந்துஅழிவேனோ ? |
|