ஏழுநூறு ஓசனை - எழுநூறு யோசனை அளவுக்கு; எயில் ஆழ்ந்து - மதிலால் சூழப்பெற்று; கிடந்தது - பரவியிருப்பதாகிய; இவ் இலங்கை - இந்த இலங்கை மாநகரில்; வாழும் - வாழ்கின்ற; மா மன்னுயிர் - சிறந்த நிலைபெற்ற பிராணிகளுள்; யான் காணாத - யான் பார்த்திராதவை; இல்லை - கிடையாது; ஊழியான் - ஊழிகளின் தலைவனான இராமபிரானின்; பெருந்தேவி - பெருந்தேவியாகிய; ஒருத்தியுமே - ஒப்பற்றவள் மட்டுமே; யான் காணேன் - நான் பார்க்கவில்லை; ஆழிதாய் - (நீர்) கடலைக் கடந்து; இடர் ஆழியிடையே - துன்பமாகிய கடலில்; வீழ்ந்து - அழுந்தி; அழிவேனோ - இறப்பேனோ. ஓசனை - நான்குகாதம். ‘ஓசனை கமழும்’ என்னும் சிந்தாமணித் தொடர்க்கு ‘நான்கு காதம் எல்லை நாறும்’ என்று இனியர் உரை வகுத்தார். மற்று - அசை. உயிர் என்றதுபிராணிகளை - உயிர் எல்லாம் தன் உயிர் என நல்கும் அந்தணன் (வனம்புகு - 22). பெருந்தேவி -பட்டத்தரசி. உடன் முடிகவித்த இயற்பெருந்தேவி (பெருங்கதை 2.4.24). (229) 5064. | வல்அரக்கன் தனைப்பற்றி வாயாறுகுருதிஉகக் கல் அரக்கும்கரதலத்தால் காட்டுஎன்று காண்கேனோ ? எல் அரக்கும்அயில் நுதிவேல் இராவணனும்இவ் ஊரும் மெல் அரக்கின்உருகிஉக வெந்தழலால் வேய்கேனோ ? |
கல் - மலைகளைக்கூட;அரக்கும் - பொடியாக்கும்; கரதலத்தால் - (என்னுடைய) கைகளால்; வல் - வலிமை உடைய; அரக்கன்தனை - இராவணனை; வாய் - வாய்வழியாக; குருதிஆறுஉக - இரத்த நதி பெருக்கெடுக்க; பற்றி - இறுக்கிப் பிடித்து; காட்டு என்று - பிராட்டியைக் காட்டுக என்று; காண்கேனோ - காண்பேனோ (அல்லது); எல் - சூரியனையே; அரக்கும் - வருத்துகின்ற; அயில் - கூர்மையான; நுதிவேல் - நுனியை உடைய வேலேந்திய; இராவணனும் - இராவணனும்; இவ்வூரும் - இந்த இலங்கையும்; மெல் அரக்கின் - மென்மையான அரக்கைப்போல; |