பக்கம் எண் :

ஊர் தேடு படலம்223

     ஏழுநூறு ஓசனை - எழுநூறு யோசனை அளவுக்கு; எயில் ஆழ்ந்து
-
 மதிலால் சூழப்பெற்று; கிடந்தது - பரவியிருப்பதாகிய; இவ் இலங்கை -
இந்த இலங்கை மாநகரில்; வாழும் - வாழ்கின்ற; மா மன்னுயிர் - சிறந்த
நிலைபெற்ற பிராணிகளுள்; யான் காணாத - யான் பார்த்திராதவை; இல்லை
-
கிடையாது; ஊழியான் - ஊழிகளின் தலைவனான இராமபிரானின்;
பெருந்தேவி -
பெருந்தேவியாகிய; ஒருத்தியுமே - ஒப்பற்றவள் மட்டுமே;
யான் காணேன் -
நான் பார்க்கவில்லை; ஆழிதாய் - (நீர்) கடலைக் கடந்து;
இடர் ஆழியிடையே -
துன்பமாகிய கடலில்; வீழ்ந்து - அழுந்தி;
அழிவேனோ -
இறப்பேனோ.

     ஓசனை - நான்குகாதம். ‘ஓசனை கமழும்’ என்னும் சிந்தாமணித்
தொடர்க்கு ‘நான்கு காதம் எல்லை நாறும்’ என்று இனியர் உரை வகுத்தார்.
மற்று - அசை.

     உயிர் என்றதுபிராணிகளை - உயிர் எல்லாம் தன் உயிர் என நல்கும்
அந்தணன் (வனம்புகு - 22).

     பெருந்தேவி -பட்டத்தரசி. உடன் முடிகவித்த இயற்பெருந்தேவி
(பெருங்கதை 2.4.24).                                         (229)

5064.

வல்அரக்கன் தனைப்பற்றி
     வாயாறுகுருதிஉகக்
கல் அரக்கும்கரதலத்தால்
     காட்டுஎன்று காண்கேனோ ?
எல் அரக்கும்அயில் நுதிவேல்
     இராவணனும்இவ் ஊரும்
மெல் அரக்கின்உருகிஉக
    வெந்தழலால் வேய்கேனோ ?

     கல் - மலைகளைக்கூட;அரக்கும் - பொடியாக்கும்; கரதலத்தால் -
(என்னுடைய) கைகளால்; வல் - வலிமை உடைய; அரக்கன்தனை -
இராவணனை; வாய் - வாய்வழியாக; குருதிஆறுஉக - இரத்த நதி
பெருக்கெடுக்க; பற்றி - இறுக்கிப் பிடித்து; காட்டு என்று - பிராட்டியைக்
காட்டுக என்று; காண்கேனோ -  காண்பேனோ (அல்லது); எல் -
சூரியனையே; அரக்கும் - வருத்துகின்ற; அயில் -  கூர்மையான; நுதிவேல்
-
நுனியை உடைய வேலேந்திய; இராவணனும் - இராவணனும்; இவ்வூரும் -
இந்த இலங்கையும்; மெல் அரக்கின் - மென்மையான அரக்கைப்போல;