| ஊடுகண்டிலென்என்னின், பின், உரியது ஒன்று இல்லை; வீடுவேன், மற்றுஇவ் விலங்கல்மேல் இலங்கையை வீட்டி’. |
மாடு நின்ற -பக்கத்தில் நிமிர்ந்துள்ள; மணிமலர் அ சோலை - அழகிய மலர்கள் மலர்ந்த அந்தச் சோலையை; மருவி - (யான்) அடைந்து; அவ்வழி - அவ்விடத்தில்; தேடி காண்பெனேல் - தேடிப் பிராட்டியைப் பார்ப்பேனானால்; என் சிறுமை தீரும் - என்னுடைய துன்பம் நீங்கும்; ஊடு கண்டிலென் என்னின் - சோலையின் உள்ளே காணப் பெற்றிலேன் என்றால்; பின் - பிறகு; விலங்கல்மேல் இ இலங்கையை - திரிகூட மலையில் உள்ள இந்த இலங்கைமா நகரை; வீட்டி - பாழாக்கி; வீடுவென் - யான் இறப்பேன்; உரியது - செய்வதற்கு உரிய செயல்; மற்று ஒன்று இல்லை - வேறு ஒன்று கிடையாது. சிறுமை -தேய்ந்து சிறிதாதல். (குறள் 769. பரிமேல்.) விலங்கல்மேல் உள்ள இலங்கையை வீட்டி என்பதற்கு திரிகூட மலையின்மேலே உள்ள இலங்கையை அழித்து என்று உரை கூறுவார் உளர். இக்கலித்துறை மா - விளம் - விளம் - விளம் - மா என்னும் சீர்களை முறையே பெற்று வரும். இத்தகைய பாடல்கள் இந்நூலில் 1223 உள்ளன (மணிமலர் 76) இதனை வை.மு.கோ. அவர்கள் காப்பியக் கலித்துறை என்று குறிக்கின்றார். (1) 5070. | என்று,சோலை புக்கு எய்தினன், இராகவன் தூதன்; ஒன்றி வானவர் பூமழை பொழிந்தனர் உவந்தார்; அன்று, அவ் வாள்அரக்கன் சிறை அவ் வழி வைத்த துன்று அல்ஓதிதன் நிலை இனிச் சொல்லுவான் துணிந்தாம். |
என்று - என்று சிந்தித்து;இராகவன் தூதன் - இராமபிரானின் தூதனான அனுமன்; சோலை புக்கு எய்தினன் - சோலைக்குள் சென்று சேர்ந்தான்; (அப்போது) வானவர் - தேவலோகத்தி்ருப்பவர்; ஒன்றி பூ மழை பொழிந்தனர் - ஒன்று சேர்ந்து பூமாரி பொழிந்து; உவந்தார் - மகிழ்ச்சி அடைந்தனர்; இனி - இனிமேல்; வாள் அரக்கன் - வாள் ஏந்திய இராவணனால்; அவ்வழி சிறைவைத்த - அச் சோலையில் சிறை வைக்கப்பெற்ற; அல் துன்று ஓதிதன் - இருள் போன்ற கூந்தலையுடைய |