எண்ணார் - துன்புறுத்தநினையாமல்; செறிந்தார் - அடங்கியிருந்தனர்; நெறிந்து ஆர் ஓதி - சுருண்ட கூந்தலையுடைய; பேதையும் - பிராட்டியும்; ஆவி நிலை நின்றாள் - உயிர் நிலைக்கப் பெற்றாள். அறிந்தார் -முக்காலமும் அறிந்த ஞானிகள். மன்னனை அஞ்சிப் பிரியாதார், சீற்றம் பிரிந்தார். தீவினை அன்னார் தெறல் என்றார் செறிந்தார், பேதையும் ஆவி நிலை நின்றாள் என்று கூறுக. திரிசடையைத் தமிழாக்கி முச்சடை என்றான். (159) |