காட்சிப்படலத்தில் (கம்ப. 5096) இந்த நிகழ்ச்சியைப் பிராட்டி நினைந்ததாகப் பேசப்படுகிறது. (77) 5422. | ‘ “என் ஓர் இன் உயிர் மென் கிளிக்கு யார் பெயர் ஈகேன் ? மன்ன !”என்றலும், “மாசு அறு கேகயன் மாது, என் அன்னைதன் பெயர்ஆக” என அன்பினொடு, அந் நாள், சொன்ன மெய்ம்மொழி சொல்லுதி-மெய்ம்மை தொடர்ந்தோய் ! |
மெய்ம்மைதொடர்ந்தோய் - உண்மை நெறியில்இயங்கும் அனுமனே;என் - என்னுடைய; ஓர் இன் உயிர் - ஒப்பற்ற இனிய உயிர் போன்ற; மென்கிளிக்கு - மென்மையான கிளிப்பிள்ளைக்கு; யார் பெயர் ஈகேன் -எவருடைய பெயரை இடுவேன்; மன்ன - அரசே!; என்றலும் - என்று யான்கூறியதும் (சீதையே); மாசு அறு - குற்றம் அற்ற; என் அன்னை -என்னுடைய தாயாகிய; கேகயன் மாது - கேகய வேந்தன் புதல்வியாகிய கைகேயியின்; பெயர் ஆக - பெயர் அமைக; என - என்று; அன்பினொடு - அன்பினுடன்; அந்நாள் - அக்காலத்தில் (இராமபிரான்); சொன்ன மெய்மொழி - கூறிய மெய்ம்மையான வார்த்தையை; சொல்லுதி - சொல்வாயாக; அனுமன் உண்மைபேசுபவன் என்று பிராட்டி கூறியது திருவடியின் சீலத்தை உணர்ந்தமையால் என்க. இராமபிரான் சிற்றன்னை பால் கொண்ட பேரன்பை நினைவு கூர்ந்தாள். ஈகேன் - வழங்குவேன். பெயரிடுதலை ஈதல் என்பது மரபு போலும். ‘இராமன் எனப் பெயர் ஈந்தனன்’ என்று (கம்ப. 296) பாலகாண்டம் பேசும். பேரறியாத பெரும் பொருளுக்குப் பெயர் வைத்தல் தொண்டரின் உரிமை. (78) சீதை சூடாமணியைத்தருதல் 5423. | என்றுஉரைத்து, ‘இனிது இத்தனை பேர் அடையாளம்; ஒன்று உணர்த்துவதுஇல்’ என எண்ணி உணர்ந்தாள், |
|