பக்கம் எண் :

சூடாமணிப் படலம்469

 

தன் திருத்துகிலில் பொதிவுற்றது, தானே
வென்றது அச்சுடர், மேலொடு கீழ் உற மெய்யால்,

     என்று உரைத்து -என்று கூறி(பிறகு பிராட்டி); இத்தனை பேர்
அடையாளம் -
இவ்வளவு பெரிய அடையாளம்; இனிது - இனிமையானது
(இனி); உணர்த்துவது - கூறக்கூடிய செய்தி; ஒன்று இல் - வேறு ஒன்று
இல்லை; என - என்று; எண்ணி - கருதி; தன் - தன்னுடைய; திருத்துகிலில்
-
அழகிய சேலையில்; பொதிவுற்றது - முடிந்து வைக்கப்பெற்றதும்; மேலொடு
கீழ் -
விண்ணுலகத்திலும் மண்ணுலகத்தி்லும்; உற - நன்றாக; மெய்யால் -
தன்னுடைய மேனியால்; தானே - தான் ஒன்றியாகவே; அச்சுடர் வென்றது -
அந்தச் சூரியனை வென்றதுமாகிய சூடாமணியை; உணர்ந்தாள் - (அனுமன்
பால் வழங்க வேண்டும் என்று) அறிந்தாள்.

     வாயால் கூறவேண்டிய அடையாளம் போதும். இனி கண்ணால் காண
வேண்டிய அடையாளம் வழங்க எண்ணிய பிராட்டி சூடாமணியை அனுமன்
பால் வழங்கக் கருதினாள். அனுமன்பால் சூடாமணி வழங்க வேண்டும் என்று
அறிந்தாள். உணர்தல் - அறிதல்.                              (79)

5424.

வாங்கினாள், தன் மலர்க்கையில்; மன்னனை
                                  முன்னா,
ஏங்கினாள்; அவ்அனுமனும், ‘என்கொல் இது ?’
                                  என்னா,
வீங்கினான்;வியந்தான்; உலகு ஏழும் விழுங்கித்
தூங்கு கார் இருள்முற்றும் இரிந்தது சுற்றும்.

(பிராட்டி)(சூடாமணியை)

     தன் - தன்னுடைய; மலர்க்கையில் - மலர் போன்ற கைகளில்;
வாங்கினாள் - எடுத்தாள்; மன்னனை முன்னா - இராமபிரானை எண்ணி;
ஏங்கினாள் - ஏக்கமுற்றாள்; அனுமனும் - (அது கண்ட) திருவடியும்; இது -
பிராட்டியின் கையில் உள்ள இப்பொருள்; என்கொல் என்னா - யாதோ
என்று; வீங்கினான் - உடல் பூரித்தான்; வியந்தான் - ஆச்சரியப்பட்டான்
(அப்போது) (மணியின் ஒளியால்); உலகு ஏழும் விழுங்கி - ஏழு
உலகங்களையும் உட் கொண்டு; தூங்கு - உறங்குகின்ற; கார் இருள் முற்றும்
-
கரிய