பக்கம் எண் :

பொழில் இறுத்த படலம்475

     வஞ்சனை அரக்கனை- கபடத்தன்மை பொருந்திய அரக்கனாகிய
இராவணனை; நெடு வாலால் - எனது நெடிய வாலினால்; அஞ்சினுடன்
அஞ்சு தலை தோள் உற -
பத்துத் தலைகளும் இருபது தோள்களும் ஒன்று
சேரும் படி; நெருக்கி அடைத்து - நெருக்கிக் கட்டி; வெம்
சிறையில்வைத்தும் இலென் -
கொடிய சிறைக்காவலில் வைத்தேனும்
அல்லேன்; வென்றும் இலென் - போரில் அவனை வென்றேனும் அல்லேன்;
என்றால் - என்று சொல்லுவமானால்; ஒருவர்க்கு ஒருவர் தஞ்சம் என்றல் -
ஒருவருக்கு ஒருவர் பற்றுக்கோடு என்ற உறுதிமொழி கூறல்; தகும்
அன்றோ-
தகுதி உடையதாகுமல்லவோ (தகுதி உடையதாகாது என்றபடி).

     தஞ்சம்ஒருவர்க்கு ஒருவர் என்றது. இராமபிரானும் சுக்கிரீவனும் உற்ற
துணையாக நட்புக் கொண்டதைக் குறிப்பது. தன் அரசனான சுக்கிரீவனுக்கு
உள்ள பொறுப்பை அனுமன் தன்மேல் ஏற்றிக் கொண்டதாகும். அசைத்தல் -
கட்டுதல்.                                                    (3)

5432.

‘கண்டநிருதக் கடல் கலக்கினென், வலத்தின்
திண் திறல்அரக்கனும் இருக்க ஓர் திறத்தின்
மண்டவுதரத்தவள்மலர்க் குழல் பிடித்து,
கொண்டு சிறைவைத்திடுதலில் குறையும்
                            உண்டோ ?

     வலத்தால் -என்வலிமையினால்; கண்டநிருதக்கடல் - கண்ணுக்குத்
தெரிகின்ற அரக்கர் கூட்டத்தை; கலக்கினென் - கலங்கச் செய்தவனாய்;
திண்திறல் அரக்கனும் இருக்க - மிக்க வலிமை உடைய அரக்கனாகிய
இராவணனும் பார்த்துக் கொண்டிருக்க; ஓர் திறத்தின் - ஒப்பற்ற எனது
ஆற்றலினால்; மண்ட உதரத்தவள் மலர்க்குழல் பிடித்து - (அவனது
பட்டத்து அரசியான) மண்டோதரியின் மலரணிந்த கூந்தலைப் பற்றி;
சிறைகொண்டு வைத்திடுதலில் - சிறையாகக் கொண்டு வைப்பதில்; கு
றையும்உண்டோ -
குறைவு உள்ளதோ ? (இல்லை என்றபடி)

     இராவணனைச்சிறைவைத்தலை விட அவன் மனைவியைச் சிறையில்
அடைத்தலே நிறைவானதாக இருக்கும் எனக் கருதுகின்றான்,