பெரிய கைகளால்;மண் நின்றும் வாங்கி - தரையிலிருந்தும் (அந்தச் சயித்தத்தை - மண்டபத்தை) எளிதாகப் பெயர்த்தெடுத்து, இதுவும் அடுத்தகவியும் குளகமாகும். (53) 5482. | விட்டனன்,இலங்கைதன்மேல்; விண் உற விரிந்த மாடம்; பட்டன, பொடிகள்ஆன; பகுத்தன பாங்கு நின்ற; சுட்டன பொறிகள்வீழத் துளங்கினர், அரக்கர்தாமும்; கெட்டனர்வீரர், அம்மா !-பிழைப்பரோ கேடு சூழ்ந்தார் ? |
இலங்கை தன்மேல் விட்டனன் - பேர்த்தெடுத்த அம்மண்டபத்தை) இலங்கை நகர் மீது வீசி எறிந்தான்; (அதனால்) விண் உற விரிந்த மாடம் - வானத்தை அளாவும்படி பரவியிருந்த மாளிகைகள்; பட்டன பொடிகள் ஆன - மோதப் பட்டனவாய்ப் பொடிகளாக உதிர்ந்தன; பாங்கு நின்ற பகுத்தன - பக்கத்தில் நின்ற கட்டிடங்களும் பிளவுபட்டன; பொறிகள் வீழச் சுட்டன - நெருப்புப் பொறிகள் விழுவதனால், பொருள்களையெல்லாம் சுட்டெரித்தன; வீரர் அரக்கர் தாமும் துளங்கினர் கெட்டனர் - எதற்கும் கலங்காத அரக்கரில் உண்மையான வீரர்களும் அழிந்தொழிந்தார்கள்; கேடு சூழ்ந்தார் பிழைப்பரோ ? - பிறர்க்குக் கேடு செய்தவர்கள் அந்தத் தீவினைப் பயனை அனுபவியாது தப்புவார்களோ ? (தப்ப மாட்டார்கள்). ‘கேடு சூழ்ந்தார்பிழைப்பரோ’ என்ற பொதுப் பொருளைக் கொண்டு. ‘அரக்கர் கெட்டனர்’ என்ற சிறப்புப் பொருள் விளக்கப்பட்டது. வேற்றுப் பொருள் வைப்பணி. அம்மா என்ற இடைச்சொல் இரக்கத்தைச் சுட்டியது. (54) பருவத் தேவர்இராவணனிடம் சென்று கூறுதல் 5483. | நீர் இடுதுகிலர்; அச்ச நெருப்பு இடு நெஞ்சர்; நெக்குப் பீரிடும் உருவர்;தெற்றிப் பிணங்கிடு தாளர்; பேழ் வாய், ஊர் இடு பூசல் ஆரஉளைத்தனர்; ஓடி உற்றார்;- பார் இடு பழுவச்சோலை பாரிக்கும் பருவத் தேவர். |
|