பக்கம் எண் :

பொழில் இறுத்த படலம்507

இராவணன் இகழ்தலும்காவலர் அனுமனைப் புகழ்தலும்

5486.

‘ஆடகத் தருவின் சோலை பொடி படுத்து, அரக்கர்
                                    காக்கும்
தேட அரு வேரம்வாங்கி, இலங்கையும், சிதைத்தது
                                    அம்மா !
கோடரம் ஒன்றே! நன்று இது ! இராக்கதர் கொற்றம் !
                                    சொற்றல்
மூடரும்மொழியார்’ என்ன மன்னனும் முறுவல்
                                   செய்தான்.

     கோடரம் ஒன்றே- (இவ்வாறு சொல்லக் கேட்ட இராவணன்) குரங்கு
ஒன்றே; ஆடகத் தருவின் சோலை - பொன்மயமான மரங்களை உடைய
சோலையை; பொடிபடுத்து - தூளாகும் படி அழித்து; அரக்கர் காக்கும்
தேட அரும் வேரம் வாங்கி -
அரக்கர்கள் காவல் புரியும் எங்கும் தேடிக்
காண்பதற்கு அரிய சயித்தத்தைப் பறித்து; இலங்கையும் சிதைத்தது -
இலங்கையையும் அழித்து விட்டது; இராக்கதர் கொற்றம் நன்று -
அரக்கர்களுடைய வீரம் நன்றாக இருக்கின்றது; இது சொற்றல் மூடரும்
மொழியார் என்ன -
இவ்வாறான பேச்சை அறிவீனரும் சொல்லமாட்டார்கள்
என்று; மன்னனும் முறுவல் செய்தான் - அரக்கர்க்கு அரசனான
இராவணனும் புன் சிரிப்புக் கொண்டான்.

     மன்னன் முறுவல்செய்தது; எள்ளற் குறிப்பு. பருவத் தேவர்களின்
பேச்சை நம்பவில்லை இராவணன் என்பதை அவன் முறுவல் காட்டுகின்றது.
கோடரம் - குரங்கு.                                        (58)

5487.

தேவர்கள்,பின்னும், ‘மன்ன ! அதன் உருச் சுமக்கும்
                            திண்மைப்
பூவலயத்தைஅன்றோ புகழ்வது ! புலவர் போற்றும்
மூவரின் ஒருவன்என்று புகல்கினும், முடிவு இலாத
ஏவம், அக்குரங்கை, ஐய ! காணுதி இன்னே’
                            என்றார்.

     தேவர்கள் -(இராவணன்  இகழ்ந்ததைக் கண்ட) பருவத் தேவர்கள்;
பின்னும் -
மேலும், இராவணனை நோக்கி; மன்ன ! - அரசனே!; அதன்
உருச் சுமக்கும் -
அந்தக் குரங்கின் உடலைத் தாங்கவல்ல; திண்மை -
வலிமை உடைய; பூவலயத்தை அன்றோ