5490. | புல்லிய முறுவல் தோன்ற, பொறாமையும் சிறிது பொங்க, எல்லை இல்ஆற்றல் மாக்கள் எண் இறந்தாரை ஏவி, ‘வல்லையின்அகலா வண்ணம், வானையும் வழியை மாற்றி, கொல்லலிர்குரங்கை, நொய்தின் பற்றுதிர், கொணர்திர்’ என்றான். |
புல்லிய முறுவர்தோன்ற பொறாமையும் சிறிது பொங்க - (இராவணன்) அற்பமான சிறுநகை உண்டாகவும், பொறாமையும் சிறிது மேற் கிளம்பவும்; எல்லை இல் ஆற்றல் மாக்கள் எண் இறந்தாரை ஏவி - அளவற்ற வலிமை பெற்ற ஏவலர்கள் எண்ணி்றந்தவர்களை ஏவி அனுப்பி; வானையும் வழியை - ஆகாய வழியையும்; மாற்றி - தடுத்து; குரங்கை - அந்தக் குரங்கை; அகலா வண்ணம் வல்லையில் கொல்லலிர் நொய்தின் பற்றுதிர் கொணர்திர் - தப்பி அப்புறம் செல்லாதபடி, கொல்லாமல் விரைவில்,எளிதாக, பிடித்துக் கொண்டு வாருங்கள்; என்றான் - என்று கூறினான். இராவணன்பொறாமைக்குக் காரணம், அவனது அந்தப்புரக் கடிகா குரங்கால் அழிக்கப்பட்டது , நொய்து - எளிது; மெதுவாக. (2) கிங்கரர் போருக்குவிரைதல் 5491. | சூலம்,வாள், முசலம், கூர் வேல், தோமரம், தண்டு, பிண்டி- பாலமே முதலாஉள்ள படைக்கலம் பரித்த கையர்; ஆலமே அனையமெய்யர்; அகலிடம் அழிவு செய்யும் காலம்மேல்எழுந்த மூரிக் கடல் என, கடிது செல்வார். |
சூலம்....படைக்கலம் பரித்தகையர் - சூலாயுதம், முதலிய பலவகையான போர்க் கருவிகளைத் தாங்கிய கையர்களாகவும்; ஆலமே அனைய மெய்யர் - விஷத்தை ஒத்த கறுத்த உடலை உடையவராகவும் உள்ள அரக்கர்கள்; அகலிடம் அழிவு செய்யும் காலம் - பூமிப்பரப்பு முழுவதையும் அழித்து விடுதலை உடைய பிரளய காலத்தில்; மேல் எழுந்த மூரிக் கடல் என - பொங்கிக் கிளம்பிய வலிய கடல் போல; கடிது செல்வார் - விரைந்து போவாராயினர். |