பக்கம் எண் :

512சுந்தர காண்டம்

சொல்லப்படுகின்றபகைவர்களுடைய; இரு குறும்பு எறிந்து நின்ற
இசையினார் -
பெரிய அரண்களை அழித்து, விளங்கும் நிலை பெற்ற
புகழையுடையவர்களுக்கு; பொரு குறும்பு ஏன்று - பொருகின்ற போரினை
மேற்கொண்டு; பூஉண் வாழ்க்கை ஒரு குறுங் குரங்கு - மலர் (காய்கனி
கிழங்கு) முதலியவற்றை உண்டு வாழ்கின்ற ஒரு சின்னக் குரங்கு; வென்றி
புணர்வது வசை என்று எண்ணி -
வெற்றி அடைவது இது ஒரு பெரும்
பழிப்பு ஆகும் என்று நினைத்து; நெடிது நாண் உழக்கும் நெஞ்சர் -
பெரிதும் வெட்கத்தால் வருந்தும் மனத்தினராயினர்.

     நாண் உழக்கும்நெஞ்சர்; தேவர் தானவர்களை வென்ற தாம், பூவை
உண்ணும் ஒரு குரங்கோடு போர் செய்ய நிகழ்ந்ததை நினைத்து வருந்தும்
மனத்தினர்.                                                 (5)

5494.

கட்டியவாளர்; இட்ட கவசத்தர்; கழலர்; திக்கைத்
தட்டிய தோளர்;மேகம் தடவிய கையர்; வானை
எட்டிய முடியர்;தாளால் இடறிய பொருப்பர்; ஈட்டிக்
கொட்டிய பேரிஎன்ன, மழை என, குமுறும்
                                  சொல்லார்;

     கட்டிய வாளர் -இடையில்கட்டிய வாளாயுதத்தை உடையவர்கள்;
இட்ட கவசத்தர் கழலர் - பூண்ட கவசத்தையும் வீரக் கழல்களையும்
உடையவர்கள்; திக்கைத் தட்டிய தோளர் - திக்குகளின் எல்லையை முட்டிய
தோள்களை உடையவர்கள்; மேகம் தடவிய கையர் - மேகங்களைத்
தடவும்படி நீண்ட கைகளை உடையவர்கள்; வானை எட்டிய முடியர் - வான
மண்டலத்தை எட்டித் தொட்ட தலையை உடையவர்கள்; தாளால் இடறிய
பொருப்பர் -
தம் கால்களால் இடறியெறியும் மலைகளை உடையவர்கள்.
(மலைகளைக் காலால் இடறித் தள்ளுபவர்); ஈட்டி கொட்டிய பேரி என்ன
மழை என குமுறும் சொல்லார் -
ஒருங்கே சேர்த்து முழக்கப்பட்ட பேரிகை
போலவும், மேகத்தின் இடி போலவும் முழங்குகின்ற சொற்களை
உடையவர்கள்.                                            (6)

5495.

வானவர்எறிந்த தெய்வ அடு படை வடுக்கள்,
                                 மற்றைத்
தானவர் துரந்தஏதித் தழும்பொடு தயங்கும் தோளர்;