சொல்லப்படுகின்றபகைவர்களுடைய; இரு குறும்பு எறிந்து நின்ற இசையினார் - பெரிய அரண்களை அழித்து, விளங்கும் நிலை பெற்ற புகழையுடையவர்களுக்கு; பொரு குறும்பு ஏன்று - பொருகின்ற போரினை மேற்கொண்டு; பூஉண் வாழ்க்கை ஒரு குறுங் குரங்கு - மலர் (காய்கனி கிழங்கு) முதலியவற்றை உண்டு வாழ்கின்ற ஒரு சின்னக் குரங்கு; வென்றி புணர்வது வசை என்று எண்ணி - வெற்றி அடைவது இது ஒரு பெரும் பழிப்பு ஆகும் என்று நினைத்து; நெடிது நாண் உழக்கும் நெஞ்சர் - பெரிதும் வெட்கத்தால் வருந்தும் மனத்தினராயினர். நாண் உழக்கும்நெஞ்சர்; தேவர் தானவர்களை வென்ற தாம், பூவை உண்ணும் ஒரு குரங்கோடு போர் செய்ய நிகழ்ந்ததை நினைத்து வருந்தும் மனத்தினர். (5) 5494. | கட்டியவாளர்; இட்ட கவசத்தர்; கழலர்; திக்கைத் தட்டிய தோளர்;மேகம் தடவிய கையர்; வானை எட்டிய முடியர்;தாளால் இடறிய பொருப்பர்; ஈட்டிக் கொட்டிய பேரிஎன்ன, மழை என, குமுறும் சொல்லார்; |
கட்டிய வாளர் -இடையில்கட்டிய வாளாயுதத்தை உடையவர்கள்; இட்ட கவசத்தர் கழலர் - பூண்ட கவசத்தையும் வீரக் கழல்களையும் உடையவர்கள்; திக்கைத் தட்டிய தோளர் - திக்குகளின் எல்லையை முட்டிய தோள்களை உடையவர்கள்; மேகம் தடவிய கையர் - மேகங்களைத் தடவும்படி நீண்ட கைகளை உடையவர்கள்; வானை எட்டிய முடியர் - வான மண்டலத்தை எட்டித் தொட்ட தலையை உடையவர்கள்; தாளால் இடறிய பொருப்பர் - தம் கால்களால் இடறியெறியும் மலைகளை உடையவர்கள். (மலைகளைக் காலால் இடறித் தள்ளுபவர்); ஈட்டி கொட்டிய பேரி என்ன மழை என குமுறும் சொல்லார் - ஒருங்கே சேர்த்து முழக்கப்பட்ட பேரிகை போலவும், மேகத்தின் இடி போலவும் முழங்குகின்ற சொற்களை உடையவர்கள். (6) 5495. | வானவர்எறிந்த தெய்வ அடு படை வடுக்கள், மற்றைத் தானவர் துரந்தஏதித் தழும்பொடு தயங்கும் தோளர்; |
|