| யானையும்பிடியும் வாரி இடும் பில வாயர்; ஈன்ற கூனல் வெண்பிறையின் தோன்றும் எயிற்றினர்; கொதிக்கும் கண்ணர்; |
வானவர் எறிந்ததெய்வ அடுபடை வடுக்கள் - தேவர்கள் தம் மீது வீசி எறிந்த தெய்வத்தன்மை உள்ள, கொல்ல வல்ல ஆயுதங்களால் உண்டான தழும்புகள்; மற்றை தானவர் துரந்த ஏதி தழும் பொடு தயங்கு ம்தோளர் - தேவரின் வேறான அசுரர்கள் போரில் தூண்டிய ஆயுதங்களால்உண்டான தழும்புகளோடு விளங்குகின்ற தோள்களை உடையவர்கள்;யானையும் பிடியும் வாரி இடும் பில வாயர் - ஆண் யானையையும்பெண்யானையையும் வாரி உண்ணுகின்ற குகை போன்ற வாயினைஉடையவர்கள்; ஈன்ற கூனல் வெண் பிறையின் தோன்றும் எயிற்றினர் -புதிதாகத் தோன்றிய வளைந்த வெண்மையான பிறைச் சந்திரன் போன்றுகாணப்படுகின்ற பற்களை உடையவர்கள்; கொதிக்கும் கண்ணர் - கோபத்தால் பொங்கும் கண்களை உடையவர்கள். ஏதி - ஆயுதம்;எயிறு - பல். (7) 5496. | சக்கரம்,உலக்கை, தண்டு, தாரை, வாள், பரிகம், சங்கு, முற்கரம் முசுண்டி,பிண்டிபாலம், வேல், சூலம், முட்கோல், பொன் கரக்குலிசம், பாசம், புகர் மழு, எழு பொன் குந்தம், வில், கருங் கணை, விட்டேறு, கழுக்கடை, எழுக்கள் மின்ன; |
சக்கரம் உலக்கை - சக்கராயுதங்களும்உலக்கைகளும்; தாரை வாள் - கூர் நுனியை உடையவாளாயுதங்களும்; பரிசும், சங்கு - இருப்பு வளைதடிகளும் சங்கங்களும்; முற்கரம், முசுண்டி - சம்மட்டிகளும் முசுண்டி என்னும் ஆயுதங்களும்; பிண்டி பாலம் - எறியீட்டிகளும்; வேல், சூலம், முள்கோல் - வேல்களும், சூலங்களும் முட்கோல்களும்; பொன் கரம் குலிசம் - அழகிய ஒளி வீசுகின்ற வச்சிராயுதங்களும்; பாசம், புகர்மழு - கயிற்றின் வடிவான ஆயுதங்களும், ஒளியுள்ள மழுக்களும்; எழு பொன் குந்தம் - மேலெழுந்து தோன்றுகின்ற அழகிய ஈட்டிகளும்; வில், கருங்கணை - வில்லும் பெரிய அம்புகளும்; விட்டேறு - வீசி |