நல் அறவீரன் - சிறந்த தரும வீரனான அனுமன்; பெயர்க்கும் சாரிகை - இடம் விட்டு விரைந்து செல்வதற்குரிய சாரிகைத் தொழிலில்; கறங்கு என திசை தொறும் பெயர் வின் - காற்றாடி போல எட்டுத் திக்குகளிலும் பெயர்ந்து செல்வதாலும்; உயர்க்கும் விண்மிசை ஓங்கலின் - ஓங்கிய ஆகாயத்தின் மீது உயரச் செல்வதாலும் ; மண்ணின் வந்து உறலின் - தரையில் வந்து பொருந்துவதாலும்; அரக்கராய் உள்ளார் அயர்த்து வீழ்ந்தனர் அழிந்தனர் - இராக்கதர்கள் சோர்ந்து வீழ்ந்து அழிந்தார்கள்; மிசை வெயர்த்திலன் உயிர்த்திலன் - (ஆனால் அந்த அனுமனோ) தன்னுடம்பில், வேர்த்தல் தானும் கொண்டிலன்; பெருமூச்சு விடுதல் செய்தானும் அல்லன். சாரிகை - வட்டமாய் ஓடித் திரிதல். அனுமன் அரக்கர்களை அழிப்பதற்குச் சிறிதும் சிரமப்படவில்லை என்பது கருத்து. (53) 5542. | எஞ்சல்இல் கணக்கு அறிந்திலம்; இராவணன் ஏவ, நஞ்சம்உண்டவராம் என அனுமன்மேல் நடந்தார்; துஞ்சினார் அல்லது யாவரும் மறத்தொடும் தொலைவுற்று, எஞ்சினார்இல்லை; அரக்கரின் வீரர் மற்று யாரே ? |
இராவணன் ஏவ -இராவணன்கட்டளை இட்டு அனுப்ப; நஞ்சம் உண்டவராம் என அனுமன் மேல் நடந்தார் - விடத்தை அருந்தியவர்கள் போன்று அனுமன் மீது போருக்குச் சென்ற அந்த அரக்கர்களின்; எஞ்சல் இல் கணக்கு அறிந்திலம் - குறைவு படாத கணக்கு இவ்வளவு என்று யாம் அறிந்தோம் இல்லை; யாவரும் துஞ்சினார் அல்லது - (ஆனால்) எல்லா அரக்கரும் (எதிர்த்துப் போர் செய்து) இறந்தார்களே அல்லாமல்; மறத் தொடும்தொலைவுற்று எஞ்சினார் இல்லை - வீரத்தில் குறைந்து தோற்றமையால்எஞ்சியவர்கள் எவரும் இல்லை; அரக்கரில் வீரர் மற்றுயாரே ? -(ஆதலால்) அந்த அரக்கர்களைப் போலச் சிறந்த போர் வீரர்கள் வேறு யாரேஉளர் ? (ஒருவரும் இல்லை). அனுமன் மீதுபோருக்குச் சென்ற அரக்கர்களின் வீரத்தைக் கவிஞர் பாராட்டுவதாக அமைந்தது இக்கவிதை. (54) கிங்கரர்மடிந்ததைக் காவலர் இராவணனுக்குத் தெரிவித்தல் 5543. | வந்தகிங்கரர் ‘ஏ’ எனும் மாத்திரை மடிந்தார்; நந்தவானத்துநாயகர் ஓடினர், நடுங்கி, |
|