காவலர்,‘கண்களால் கண்டனம்’ என்றல். 5549. | ‘கண்டனம்,ஒருபுடை நின்று, கண்களால்; தெண் திரைக்கடல் என வளைந்த சேனையை, மண்டலம்திரிந்து, ஒரு மரத்தினால், உயிர் உண்டது, அக்குரங்கு; இனம் ஒழிவது அன்று’ என்றார். |
ஒரு புடை நின்றுகண்களால் கண்டனம் - நாங்கள் ஒருபக்கத்தில் மறைந்து நின்று எங்கள் கண்களால் நேரில் பார்த்தோம்; தெண் திரை கடல் என வளைந்த சேனையை- தெளிந்த அலைகளை உடைய கடல் போலப் பரந்து சூழ்ந்திருந்த அரக்கர் சேனையை; அகுரங்கு - அந்தக் குரங்கானது; மண்டலம் திரிந்து - எப்புறத்தும் வளைந்து சுழன்று சுழன்று சஞ்சரித்ததாகி; ஒரு மரத்தினால் உயிர் உண்டது - ஒரு மரத்தினாலே தாக்கி, அரக்கர் களின்உயிரை வாங்கி விட்டது; இனம் ஒழிவது அன்று என்றார் - அது,அவ்விடத்தை விட்டு இன்னும் நீங்கிப் போகவில்லை என்று கூறினார்கள். ‘கண்டனன்கற்பினுக்கு அணியைக் கண்களால்’ (6031) என்ற இடத்தும் இங்கும் வந்த சொல்நடை ஒன்றே; ஆயினும் சூழ்நிலையால் இங்கே அவலம், அங்கே களிப்பு. இரு வகையான உணர்வுகளின் அழுத்தத்தை ஒரே நடையால் உணர்த்திடும் திறனை மனங்கொள்க. (61) |