பக்கம் எண் :

சம்புமாலி வதைப் படலம்547

8.சம்புமாலிவதைப்படலம்

     அனுமனைப் பற்றிக்கொணருமாறு இராவணன் சம்புமாலி என்பவனுக்கு
ஆணையிட்டான். ஆணையை ஏற்றுச் சென்று போரிட்ட சம்புமாலியின்
வதையைப் பற்றிக் கூறுவது இந்தப் படலம்.

இராவணன் ஆணை

 அறுசீர் ஆசிரியவிருத்தம் 

5550.

கூம்பினகையன், நின்ற குன்று எனக் குவவுத்
                              திண் தோள்,
பாம்பு இவர்தறுகண், சம்புமாலி என்பவனைப் பாரா,
‘வாம் பரித்தானையோடு வளைத்து, அதன் மறனை
                             மாற்றி,
தாம்பினின்பற்றி, தந்து, என் மனச் சினம் தணித்தி’
                             என்றான்.

     கூம்பினகையன் -குவித்துவணங்கிய கைகளை உடையவனாய்;
நின்றகுன்று என குவவு திண்தோள் -
தனக்கு அருகில் நின்ற மலைபோல்
திரண்ட வலிய தோள்களையும்; பாம்பு இவர் தறுகண் சம்புமாலி
என்பவனைப் பாரா -
பாம்பை ஒத்த அஞ்சாமையையும் கொண்ட சம்புமாலி
என்னும் அரக்கனைப் பார்த்து; வாம் பரித் தானையோடு வளைத்து -
தாவிச் செல்லும் குதிரைப் படைகளோடு சென்று அந்தக் குரங்கை வளைத்து;
அதன் மறனை மாற்றி - அதன் வலிமையை அடக்கி; தாம்பினின் பற்றி
தந்து -
கயிற்றினால் கட்டி என்னிடம் கொண்டு வந்து விட்டு; என் மனம்
சினம் -
என் மனத்தில் உள்ள கோபத்தை; தணித்தி என்றான் - ஆற்
றுவாய்என்று இராவணன் கூறினான்.                        (1)

சம்புமாலிபோருக்குப் புறப்படுதல் 

5551.

ஆயவன்வணங்கி, ‘ஐய ! அளப்பரும் அரக்கர்
                            முன்னர்,
“நீஇது முடித்தி”என்று நேர்ந்தனை; நினைவின்
                           எண்ணி