பக்கம் எண் :

576சுந்தர காண்டம்

அனுமன் கை எழுவைச்சம்புமாலி அறுத்து வீ்ழ்த்தல்

5595.

முற்ற  முனிந்தான் நிருதன்; முனியா, முன்னும்
                            பின்னும் சென்று
உற்ற பகழிஉறாது, முறியா உதிர்கின்றதை உன்னா,
சுற்றும் நெடுந்தேர்ஓட்டித் தொடர்ந்தான்; தொடரும்
                           துறை காணான்;
வெற்றி எழுவைமழுவாய் அம்பால் அறுத்து
                           வீழ்த்தினான்.

     நிருதன் முற்றமுனிந்தான் - சம்புமாலி என்ற அந்தஅரக்கன்
மிகவும்கோபித்தான்; முனியா - அவ்வாறு கோபித்து; முன்னும் பின்னும்
சென்றுஉற்ற பகழி -
முன்னாகவும் பின்னாகவும் பொருந்தச் சென்று
போயடைந்தஅம்புகள்; உறாது - அனுமன் மேல்தாக்காமல்; முறியா உதிர்
கின்றதைஉன்னா -
முறிந்து கீழே சிந்தி விழுகின்றதை நினைத்து; சுற்றும்
நெடுந்தேர் ஒட்டித் தொடர்ந்தான் -
(அனுமனைச்) சுற்றிலும் (தனது) பெரிய
தேரைச்செலுத்தி நெருங்கப் பார்த்து; தொடரும் துறை காணான் -
(அவனை)நெருங்கிச் செல்லும் வழியைப் பெறாமல்; வெற்றி எழுவை -
இதுவரைவெற்றியைத் தந்த எழு என்னும் படையை; மழுவாய் அம்பால்
அறுத்துவீழ்த்தினான் -
மழுப் போன்ற நுனியை உடைய அம்பினால்
அறுத்துத்தள்ளினான்.                                        (46)

சம்பு மாலியைஅனுமன் கொல்லுதல்

5596.

சலித்தான்ஐயன்; கையால், எய்யும் சரத்தை உகச்
                           சாடி,
ஒலித் தார்அமரர் கண்டார் ஆர்ப்ப, தேரினுள் புக்கு,
கலித்தான்சிலையைக் கையால் வாங்கி,
                          கழுத்தினிடை இட்டு
வலித்தான், பகுவாய் மடித்து மலைபோல் தலை
                          மண்ணிடை வீழ.

     ஐயன் சலித்தான்- அனுமன்(தன் கையிலிருந்த எழு அறுத்து
வீழ்த்தப்பட்டதனால்) சிறிது சலிப்படைந்து; கையால் எய்யும் சரத்தை உகச்
சாடி -
(உடனே) சம்புமாலி தன்மீது எய்கின்ற அம்புகளை எல்லாம் தன்
கைகளாலேயே உதிர்ந்து போம்படி