பக்கம் எண் :

சம்புமாலி வதைப் படலம்577

மோதித்தள்ளி; ஒலித்தார் அமரர் கண்டார் ஆர்ப்ப - தழைத்தலை உடைய
மாலையை அணிந்த தேவர்கள் கண்டு ஆரவாரம் செய்ய; தேரினுள் புக்கு -
சம்பு மாலியின் தேரினுள்ளே பாய்ந்து புகுந்து; கலித்தான் சிலையை -
வீரவொலி செய்து கொண்டிருந்த அவனது வில்லை; கையால் வாங்கி
பகுவாய் மடித்து -
தன் கையால் எளிதில் பற்றி தன் திறந்த வாயை மடித்துக்
கொண்டு; மலைபோல் தலை - மலை போன்ற அவன் தலை; மண் இடை
வீழ -
தரையில் விழுமாறு; கழுத்திடை இட்டு வலித்தான் - அவனது
கழுத்திலே மாட்டி இழுத்தான்.

     ஒலித்தல் -தழைத்தல்; ‘ஒலி கொண்டு’ - ஒலி - தழைத்தல்; ‘ஒலி
தெங்கு’ (பதிற் - 13) போல.                                  (47)

5597.

குதித்து,தேரும், கோல் கொள் ஆளும், பரியும்,
                              குழம்பு ஆக
மிதித்து,பெயர்த்தும், நெடுந் தோரணத்தை வீரன்
                              மேற்கொண்டான்;
கதித் துப்புஅழிந்து கழிந்தார் பெருமை கண்டு,
                              களத்து அஞ்சி,
உதித்துப்புலர்ந்த தோல்போல் உருவத்து அமரர்
                              ஓடினார்.

     வீரன் குதித்து -அனுமன்தேரினின்றும் கீழே குதித்து; தேரும்
கோல்கொள் ஆளும் -
சம்பு மாலியின் தேரும், அதனை ஓட்டும் கோலைக்
கொண்டு செலுத்தும் தேர்ப்பாகனும்; பரியும், குழம்பு ஆகமிதித்து - தேரில்
பூட்டிய குதிரைகளும் குழம்பு போல இளகி ஓடத் தன் கால்களால் மிதித்து
அழித்துவிட்டு; பெயர்த்தும் - மீண்டும்; நெடுந்தோரணத்தை
மேற்கொண்டான் -
தான் முன்னிருந்த நெடிய தோரண வாயிலின் மீது ஏறிக்
கொண்டான்; உதித்துப் புலர்ந்த தோல் போல் உருவத்து அமரர் -
பருத்துக் காய்ந்து போன தோல் போன்ற உருவத்தை உடைய பருவத்
தேவர்கள்; கதித்துப்பு அழிந்து கழிந்தார் - விரைவுள்ள (தமது) வலிமை
யழிந்து இறந்து போன; பெருமை கண்டு - அரக்கரது பெருந் தொகையைப்
பார்த்து; அஞ்சி - (இச் செய்தியை இராவணனிடம் சொல்ல வேண்டுமே
என்று) பயந்து; களத்து ஓடினார் - போர்க்களத்தினின்றும் இராவணன்
அரண்மனையை நோக்கி விரைந்து ஓடினார்.