பக்கம் எண் :

சம்புமாலி வதைப் படலம்579

 

நக்கான் அரக்கன்; ‘நடுங்கல்’ என்றான்;‘ஐய ! நமர்
                                எல்லாம்
உக்கார்;சம்புமாலி உலந்தான்; ஒன்றே குரங்கு’
                                என்றார்.

     அமரர் - செய்தி சொல்லவேண்டிய பருவத் தேவர்கள்; பொலம் தார்
அரக்கன் பொரு இல் பெருங் கோயில் புக்கார் -
பொன்னாலான
மாலைஅணிந்த அரக்கனான இராவணனுடைய ஒப்பற்ற பெரிய
அரண்மனையில்புகுந்து; விளம் பல் ஆற்றார் - செய்தி சொல்வதற்கு
வாயெழாமல்; விக்காநின்றார் - விக்கி விக்கி நின்று; வெருவி விம்முவார்
-
அஞ்சி நடுங்குவாரானார்கள்; அரக்கன் - அது கண்ட இராவணன்;
நக்கான் -
சிரித்து; நடுங்கல் என்றான் - நடுங்காதீர் என்று கூறினான்; ஐய
! -
(பின்புஅவர் இராவணனை நோக்கி) ஐயனே !; நமர் எல்லாம் உக்கார்
-
நம்மவரான அரக்கர் அனைவரும் இறந்தனர்; சம்பு மாலி உலந்தான் -
சம்புமாலியும் இறந்து போனான்; ஒன்றே குரங்கு என்றார் -
(இவ்வளவுக்கும்அங்கு எதிர்த்துப் போர் புரிவது) ஒரே குரங்குதான் என்று
கூறினார்கள்;

      உலந்தான் -இறந்தான்.                                 (50)

அனுமனைப் பிடிக்கஇராவணனே எழுந்தபோது
படைத்தலைவர்பேசுதல் 

5600.

என்னும்அளவின், எரிந்து வீங்கி எழுந்த
                          வெகுளியான்,
உன்ன, உன்ன,உதிரக் குமிழி விழியூடு
                         உமிழ்கின்றான்,
‘சொன்னகுரங்கை, யானே பிடிப்பென், கடிது
                          தொடர்ந்து’ என்றான்,
அன்னது உணர்ந்தசேனைத் தலைவர் ஐவர்
                          அறிவித்தார்.

     என்னும் அளவின்- என்றுஅவர்கள் கூறிய அளவில்; எரிந்து
வீங்கிஎழுந்த வெகுளியான் -
பற்றி யெரிந்து மிகுதியாகக் கிளம்பின
சினத்தைஉடைய இராவணன்; உன்ன உன்ன - (அவ்வாறு சம்பு மாலி
முதலியஅரக்கர்கள் இறந்த செய்தியை) நினைக்கும் தோறும்; விழியூடு
உதிரக் குமிழிஉமிழ்கின்றான் -
விழிகளின்