பக்கம் எண் :

பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்581

9. பஞ்ச சேனாபதிகள்
வதைப் படலம்

       இராவணனின் ஐந்துபடைத் தலைவர்களையும் அனுமன் அழித்ததைக்
கூறுவது இந்தப் படலம்.

                          சேனைத்தலைவர் ஐவர் வேண்டுகோளும் இராவணன் இசைவும்

                                                                                          கலித்துறை

5601.

சிலந்திஉண்பது ஓர் குரங்கின்மேல் சேறியேல்,
                                 திறலோய் !
கலந்த போரில்நின் கண்புலக் கடுங் கனல் கதுவ,
உலந்த மால் வரைஅருவி ஆறு ஒழுக்கு அற்ற
                                 ஒக்கப்
புலர்ந்த மாமதம் பூக்கும் அன்றே, திசைப் பூட்கை ?

       திறலோய் - (சேனைத் தலைவர் இராவணனை நோக்கி) வலிமை
வாய்ந்தவனே! (நீ); சிலந்தி உண்பது ஓர் குரங்கின் மேல் சேறியேல் -
சிலந்திப் பூச்சியைப் பிடித்துத் தின்னும் ஒரு குரங்கின் மேல் போர் செய்யப்
போவாயானால்; திசைப் பூட்கை - எட்டுத் திக்கு யானைகள்; கலந்த
போரில்-
நீ எதிர்த்துப் புரிந்த போரில்; நின் கண் புலன் - உனது
கண்களிலிருந்து;கடும் கனல் கதுவ - கொடிய நெருப்புப் பொறி பறக்க;
உலந்த மால் வரை- கோடை வெயிலால் காய்ந்து போன பெரிய மலையில்;
அருவி ஆறுஒழுக்கு அற்று ஒக்க - அருவிகள் தம் வழியே செல்லும்
ஓட்டம் அற்றுப்போனது போல; புலர்ந்த மாமதம் - (உன்னால் அடிபட்டு
வலிமைகுறைந்தமையால்) அற்றுப் போன மிக்க மதநீர்; பூக்கும் அன்றே -
மீண்டும்தோன்றப் பெறும் அல்லவா ?

       அருவி ஆறுவற்றிப் போன மலைக்கு மதம் அடங்கிய திக்கு
யானைகள் உவமை. ஒரு குரங்கை எதிர்த்து இராவணன் போருக்குச்
சென்றால், அது அவனது ஆற்றலின் குறைவைத் தெரிவிக்கும். முன் தோற்ற
அந்த யானைகள், இப்போது அவனை இழிவாகக் கருதி