பக்கம் எண் :

582சுந்தர காண்டம்

மகிழ்ச்சியினால்,மதச் செருக்குக் கொள்ளும், என்று சேனைத் தலைவர்
கூறினார்கள்.                                                 (1)

5602.

‘இலங்கு வெஞ் சினத்து அம் சிறை எறுழ் வலிக்
                                  கலுழன்
உலங்கின்மேல்உருத்தென்ன, நீ குரங்கின்மேல்
                                  உருக்கின்
அலங்கல் மாலைநின் புயம் நினைந்து, அல்லும் நன்
                                  பகலும்
குலுங்கும் வன்துயர் நீங்குமால், வெள்ளியங்
                                  குன்றம்.

     இலங்கு வெம்சினத்து - விளங்குகின்ற கொடியகோபத்தையும்; அம்
சிறை -
அழகிய சிறகுகளையும்; எறுழ் வலிக் கலுழன் - மிக்க
வலிமையையும் உடைய கருடன்; உலங்கின் மேல் உருத்தென்ன - ஒரு
கொசுகின் மேல் கோபித்துப் போர் செய்வது போல; நீ குரங்கின் மேல்
உருக்கின் -
நீ அற்பக் குரங்கின் மீது போர்ீபுரியச் சென்றால்; அலங்கல்
மாலை நின் புயம் நினைந்து -
அசைந்தாடும் வெற்றி மாலை அணிந்த
நினது தோள் வலிமையை நினைந்து; வெள்ளி அம் குன்றம் - கயிலை
மலை; அல்லும் நன் பகலும் குலுங்கும் வன் துயர் நீங்கும் - இரவிலும்
நல்ல பகலிலும் அச்சத்தால் நடுங்கும் கொடுந்துன்பம் நீங்கப் பெறும்.

     ‘உன்னால் முன்புபெயர்த்தெடுக்கப்பட்டு எளிமைப் பட்ட கயிலை மலை,
நீ, இப்போது அற்பமான ஒரு குரங்கினிடம் போருக்குச் சென்றால்,
உன்னிடத்துக் கொண்டிருந்த அச்சம் நீங்கும் அல்லவா ! அதனால் எங்களைப்
போருக்கு அனுப்புக’ என்றனர் சேனாபதிகள். எறுழ் வலி; ஒரு பொருட் பன்
மொழி. உலங்கு - கொசுகு. உரு, உட்குதல், அஞ்சுதல்; உருக்குதல் - எதிராளி
அஞ்சும்படி தாக்குதல்.                                      (2)

5603.

‘உறுவது என்கொலோ ? உரன் அழிவு என்பது ஒன்று
                               உடையார்
பெறுவது யாதுஒன்றும் காண்கிலர், கேட்கிலர்
                               பெயர்ந்தார்;
சிறுமை ஈது ஒப்பதுயாது ? நீ குரங்கின்மேல்
                               செல்லின்,
முறுவல் பூக்கும்அன்றே, நின்ற மூவர்க்கும்
                               முகங்கள் ?