பக்கம் எண் :

584சுந்தர காண்டம்

சினர் - (சேனாபதிகள்)கைகளால் கும்பிட்டு வணங்கினர்; அரக்கனும்
இசைந்தான் -
இராவணனும் அதற்கு உடன்பட்டான்.

    தமக்கு முன்அனுமனோடு போர் செய்யச் சென்றோர் வலிமை
குறைந்தவர்கள் என்றும் தாங்களே அனுமனை எதிர்த்த பொழுது வெல்ல
வல்லவர்கள் என்றும் பஞ்சசேனாபதிகள் கூறுகின்றனர்.               (4)

பஞ்சசேனாபதிகளின் கட்டளைப்படி படைகள் திரளுதல் 

5605.

உலகம்மூன்றிற்கும் முதன்மை பெற்றோர் என
                              உயர்ந்தார்,
திலகம் மண் உறவணங்கினர்; கோயிலின் தீர்ந்தார்;
‘அலகு இல் தேர்,பரி, கரியொடு ஆள் மிடைந்த
                             போர் அரக்கர்,
தொலைவு இலாதனகதுமென வருக’ எனச்
                              சொன்னார்.

     மூன்று உலகிற்கும்முதன்மை பெற்றோர் என உயர்ந்தார் -
மூன்றுஉலகங்களுக்கும் தலைமை பெற்றவர் போன்று உயர்ந்தவரான பஞ்ச
சேனாபதிகள்; திலகம் மண் உற வணங்கினர் - தமது நெற்றித்திலகம்
தரையில் படும்படி இராவணனை  நோக்கிக் கீழே விழுந்து வணங்கினார்கள்;
கோயிலின் தீர்ந்தார் - (பிறகு) அரண்மனையை விட்டு வெளி வந்து;
தொலைவு இலாதன - எளிதில் அழிவில்லாதனவாகிய; அலகு இல் தேர்,
பரி கரியொடு -
அளவற்ற தேர்களும் குதிரைகளும், யானைகளும் (என்ற இச்
சேனையோடு); மிடைந்த போர் அரக்கர் - நெருக்கமாக உள்ள போர்
செய்யவல்ல அரக்கவீரர்கள்; கதும் என வருக எனச் சொன்னார் -
விரைவாக வரக்கடவர் என்று கட்டளையிட்டார்கள்.                  (5)

5606.

ஆனைமேல்முரசு அறைந்தனர் வள்ளுவர்
                           அமைந்தார்;
பேன வேலையின்புடை பரந்தது, பெருஞ் சேனை;
சோனை மா மழைமுகில் எனப் போர்ப் பணை
                           துவைத்த;
மீன வான் இடுவில் எனப் படைக்கலம் மிடைந்த.