வள்ளுவர்அமைந்தார் - பறையறைவோராக இருந்தவர்; ஆனைமேல் முரசு அறைந்தனர் - யானையின் மீது ஏறிப் போர் முரசை முழக்கினர்; பெரும் சேனை பேன வேலையில் - பெரிய அரக்கர் படைகள் நுரையை உடைய கடலைப் போல; புடை பரந்தது - எல்லாப் பக்கங்களிலும் பரவலாயிற்று; சோனை மா மழை முகில் என - விடாது பெரு மழை பொழிகின்ற மேகம் போல; போர்ப் பணை துவைத்த - போர் முரசங்கள் ஒலித்தன; மீன வான் இடு வில் என - நட்சத்திரங்கள் விளங்கும் ஆகாயத்தில் தோன்றும் வானவில்லைப் போல; படைக்கலம் மிடைந்த - போர்ப் படைக் கருவிகள் நெருங்கி விளங்கின. போர் முரசு ஒலிக்கு. மழை பொழியும் மேகமும், படைக்கலங்களுக்கு வான வில்லும் உவமைகள். பேனம் - நுரை பணை - முரசு. (6) 5607. | தானை மாக்கொடி, மழை பொதுத்து உயர் நெடுந் தாள, மானம் மாற்ற அருமாருதி முனிய, நாள் உலந்து போன மாற்றலர்புகழ் எனக் கால் பொரப் புரண்ட; வானயாற்று வெண்திரை என வரம்பு இல பரந்த. |
மழை பொதுத்துஉயர் நெடும் தாள - மேகத்தைக் குத் துமாறுமேலேஉயர்ந்து செல்லும் நீண்ட கால்களை உடையனவும்; வான யாற்று வெண்திரை என வரம்பு இல பரந்த - ஆகாய கங்கை யாற்றின் வெண்மை நிறமுள்ள அலை போலப் பலவாக உள்ளனவுமான; தானை மாக்கொடி - அரக்கர் சேனையில் விளங்கிய பெரிய வெண்ணிறக் கொடிகள்; மாற்ற அரு மானம் மாருதி முனிய - மாற்ற முடியாத பெருமை உடைய அனுமன் கோபித்திட; நாள் உலந்து போன மாற்றலர் புகழ் என - (அதனால்) ஆயுட்காலம் அழிந்து, வீரசுவர்க்கம் சென்ற பகைவர்களது புகழைப் போல; கால் பொரப் புரண்ட - காற்று மோதுதலால் அசைந்தாடின. கால் -காற்று. (7) 5608. | விரவு பொற் கழல் விசித்தனர், வெரிந் உற்று விளங்கச் சரம் ஒடுக்கினபுட்டிலும் சாத்தினர், சமையக் |
|