| கருவி புக்கனர், அரக்கர்; மாப் பல்லணம் கலினப் புரவி இட்ட;தேர் பூட்டின; பருமித்த பூட்கை. |
அரக்கர் -அந்தஇராக்கத வீரர்கள்; விரவு பொற் கழல் விசித்தனர் - (வீரத்துக்கு அடையாளமாகப்) பொருந்திய பொன்னால் செய்த வீரக் கழல்களைக் காலில் கட்டி; சரம் ஒடுக்கின புட்டிலும் வெரிந் உற்று விளங்கச் சாத்தினர் - அம்புகளை உள்ளே கொண்ட அம்பறாத தூணியையும்முதுகிற் பொருந்தி விளங்க அணிந்து கொண்டு; சமையக் கருவி புக்கனர் -நன்றாக அமையும் படிக் கவசத்தையும் பூண்டனர்; பரவி மாப்பல்லணம்கவின இட்ட - குதிரைகள், சிறந்த சேணங்கள் அழகாக விளங்கஅணியப்பட்டன; தேர் பூட்டின - தேர்கள் சித்தம் செய்யப் பட்டன; பூட்கைபருமித்த - யானைகள் அலங்கரிக்கப்பட்டவை ஆயின. நால்வகைச்சேனைகளும் போர்க்குக் கோலம் செய்து விட்டமை இங்குக் கூறப் பட்டது. கருவி - கவசம்; ‘இளைஞரும் கருவி வீசினார்; (சீவக - 2214 உரை) பருமித்தல் - அலங்கரித்தல்; ‘பல்கதிர் ஆரமும் பூணும் பருமித்து’ (சீவக 2113) (8) 5609. | ஆறு செய்தனஆனையின் மதங்கள்; அவ் ஆற்றைச் சேறு செய்தனதேர்களின் சில்லி; அச் சேற்றை நீறு செய்தனபுரவியின் குரம்; மற்று அந் நீற்றை வீறு செய்தன,அப் பரிக் கலின மா விலாழி. |
ஆனையின்மதங்கள் ஆறு செய்தன - (போருக்குச் சென்ற) யானைகளின் மதப் பெருக்குகள் (சென்ற இடங்களில்) ஆறுகளை உண்டாக்கின; அவ் ஆற்றை - அந்த மதநீர் ஆற்றை; தேர்களின் சில்லி சேறு செய்தன - தேர்களின் சக்கரங்கள் (ஓடிச்) சேறாகக் குழப்பி விட்டன; அச் சேற்றை - அவ்வாறு உண்டாகிய சேற்றை; புரவியின் குரம் நீறு செய்தன - குதிரைகளின் குளம்புகள் மிதித்துப் புழுதியாகச் செய்தன; அந் நீற்றை - அந்தப் புழுதியை; அப் பரிக் கலின மா விலாழி - அந்தக் குதிரைகளின் கடிவாளம் பூண்ட வாயிலிருந்து வழிகின்ற நுரைகள்; வீறு செய்தன - வேறு வேறாய்ப் பிளவுபடச் செய்தன. வாய்நுரை - உயர்வு நவிற்சி; இவ்வருணனை பாக்களில் மிகுதி. (9) |