பக்கம் எண் :

650சுந்தர காண்டம்

     அரக்கிமார்கள்தமது கூந்தல் காலில் விழும்படி, விரித்துக் கொண்டு
வாய்திறந்து பேரொலி எழுப்பி அழுதனர் என்பதாம். அலத்தகம் - செம்பஞ்சு;
வாய்க்கும் செம் பஞ்சு பூசப் பெறுவது உண்டு ‘அம்மலாடியும் கையும் மணி
கிளர் பவழவாயும்....  அலத்தகம் எழுதி விட்டாள்’ (சீவக. 2446) குண்டலக்
குழை - குண்டலமாகிய குழை என இருபெயரொட்டாயிற்று.                                       (42)

5710.

கதிர்எழுந்தனைய செந் திரு முகக் கணவன்மார்
எதிர் எழுந்து,அடி விழுந்து, அழுது சோர் இள
                                   நலார்
அதி நலம் கோதைசேர் ஓதியோடு, அன்று, அவ்
                                   ஊர்
உதிரமும்தெரிகிலாது, இடை பரந்து ஒழுகியே !

     கதிர் எழுந்துஅனைய செம்திருமுகக் கணவன்மார் - சூரியன்
உதித்தது போன்ற சிவந்த அழகிய முகங்களை உடைய (இறந்த) தமது
கணவன்மார்; எதிர் எழுந்து அடி விழுந்து - முன்னே எழுந்து போய்
கால்களில் விழுந்து; அழுது சோர் இள நலார் - அழுது சோர்கின்ற இளம்
பெண்களுடைய; அதிநலம் கோதை சேர் ஒதியோடு - மிக்க அழகுள்ள
மாலையை அணிந்த கூந்தலுடனே; அன்று அவ்ஊர் உதிரமும் -
அப்பொழுது அந்த ஊரில், பெருகுகின்ற இரத்தமும்; பரந்து ஒழுகி - பரவிப்
பெருகி; இடை தெரிகிலாது - வேற்றுமை அறிய முடியாதபடி ஆயிற்று.

     இளநலார் ஓதியும்(கூந்தலும்) இரத்தமும் செந்நிறமாக இருத்தலால்
வேற்றுமை தெரியாததாயிற்று. இடை - வேற்றுமை. கோதை - மாலை. ஓதி -
மகளிர் முடி.                                             (43)

5711.

தா இல்வெஞ் செரு நிலத்திடை, உலந்தவர்தம்மேல்,
ஓவியம் புரைநலார் விழுதொறும், சிலர் உயிர்த்து,
ஏவு கண்களும்இமைத்திலர்களாம்; இது எலாம்
ஆவி ஒன்று, உடல்இரண்டு, ஆயதாலேகொலாம் ?

     தா இல் வெம்செரு நிலத்திடை - குற்றம் அற்ற கொடிய
போர்க்களத்திலே; உலந்தவர் தம் மேல் - இறந்து கிடந்த அரக்க வீரர் மீது;
ஓவியம் புரை நலார் சிலர் விழுதொறும் -
சித்திரப்பது மை போன்ற
அரக்கமகளிர் சிலர் விழும் போதெல்லாம்; உயிர்த்து - பெரு மூச்சுவிட்டு;
ஏவுகண்களும் இமைத்திலர்கள் ஆம் -
அம்பு போன்ற தம் கண்களும்
இமையாதவர்களாய் மூடியிருந்தவர்