விடுவாளைக் காண்மின்காண்மின் (கலி - பரணி - 483) என்ற பாடல் ஒப்பிட்டுச் சிந்திக்கத்தக்கது. (45) 5713. | தீட்டுவாள் அனைய கண் தெரிவை, ஓர் திரு அனாள், ஆட்டில்நின்றுஅயர்வது ஓர் அறு தலைக் குறையினைக் கூட்டி, ‘நின்ஆர் உயிர்த் துணைவன், எம் கோனை, நீ, காட்டுவாயாதி’என்று, அழுது கை கூப்பினாள். |
தீட்டுவாள் அனையகண் - தீட்டப் பெற்ற வாள் போன்ற கண்களை உடைய; திரு அனாள் ஓர் தெரிவை - இலக்குமி போன்ற ஒரு அரக்கி; ஆட்டில் நின்று அயர்வது ஓர் அறு தலைக் குறையினைக் கூட்டி - கூத்தாடும் தொழிலில் இருந்து சோர்வதான தலையற்றதோர் உடலை (கவந்தத்தை) தலையோடு சேர்த்து,; (அதனை நோக்கி) ‘நின் ஆர் உயிர்த் துணைவன் - ‘உனது ஒப்பற்ற உயிர்த் துணைவனாகிய; எம் கோவினை - எமது தலைவனை; நீ காட்டுவாய் ஆதி’ என்று - நீ எனக்குக் காட்டுவாயாக’ என்று சொல்லி; அழுது கை கூப்பினாள் - அழுதவளாய்த்தனது கைகளைக்குவித்து வணங்கினாள். வீரம் மிடைந்தஅவல ஓவியமாகக் கணவனைத் தேடும் அரக்கி சித்தரிக்கப்பட்டுள்ளது அருமை. (46) 5714. | ஏந்தினாள்தலையை, ஓர் எழுத அருங் கொம்பு அனாள்; காந்தன் நின்றுஆடுவான் உயர் கவந்தத்தினை, ‘வேந்த ! நீஅலசினாய்; விடுதியால் நடம்’ எனா, பூந் தளிர்க்கைகளான், மெய் உறப் புல்லினாள். |
ஓர் எழுத அரும்கொம்பு அனாள் - சித்திரத்தில் எழுதமுடியாத மிக்க அழகுள்ள பூங்கொம்பு போன்ற ஒரு அரக்கர்மகள்; தலையை ஏந்தினாள் - (இறந்த கணவனது) தலையைக் கையில் ஏந்திக் கொண்டு; நின்று ஆடுவான் காந்தன் உயர் கவந்தத் தினை - நின்று கூத்தாடுகின்ற தன் கணவனது உயர்ந்த உடல் குறையினைப் பார்த்து; ‘வேந்த ! நீ அலசினாய் - கணவனே ! நீ வெகு நேரம் ஆடியதால் இளைத்து விட்டாய்; நடம் |