விடுதியால் - கூத்தாடுதலைவிடுவாய்; எனா - என்று சொல்லி; பூந்தளிர் கைகளால் - மலரையும் தளிரையும் போன்ற தனது கைகளால்; மெய் உறப் புல்லினாள் - (அரக்கனுடைய) உடலை இறுகத் தழுவிக் கொண்டாள். முன் செய்யுளின்கற்பனை மேலும் விரிந்து பேரவல வீரத்தைப் புலப்படுத்திற்று. (47) இராவணனிடம்மண்டோதரி முதலியோர் அழுது புலம்புதல் கலிவிருத்தம் (வேறுவகை) 5715. | கயல்மகிழ் கண் இணை கலுழி கான்று உக, புயல் மகிழ் புரிகுழல் பொடி அளாவுற, அயன் மகன் மகன்மகன் அடியின் வீழ்ந்தனள், மயன் மகள்;வயிறு அலைத்து அலறி மாழ்கினாள். |
மயன் மகள் -அசுரசிற்பியாகிய மயனது மகளான மண்டோதரி; கயல் மகிழ் கண் இணை - கயல் மீன் போன்று மதர்த்திருக்கும் கண்கள் இரண்டும்; கலுழி கான்று உக - நீர் பெருகச் சிந்தவும்; புயல் மகிழ்புரி குழல் பொடி அளாவுற - காள மேகத்தை ஒத்த முறுக்கிவிட்ட கூந்தல் மண்ணின் புழுதியிலே புரளவும்; அயன் மகன் மகன் மகன் - பிரமதேவன் குமாரனான புலத்திய முனிவரின் மகனாகிய விச்ரவஸ் என்பவனது மகனாகிய இராவணனது; அடியில் வீழ்ந்தனள் - பாதங்களில் விழுந்து; வயிறு அலைத்து - வயிற்றில் அடித்துக் கொண்டு; மாழ்கினாள் - கதறிப் புலம்பினாள். மண்டோதரி, தன்குமாரன் அட்சன் (அக்ககுமாரன்) இறக்கக்காரணமாயிருந்த இராவணனது கால்களில் விழுந்து அழுது புலம்பினாள். மகளிர், பெரும் துக்கம் வந்த போது, வயிற்றில் அடித்துக் கொள்ளும் இயல்பினராவர். (48) 5716. | தா அருந்திரு நகர்த் தையலார் முதல் ஏவரும், இடைவிழுந்து இரங்கி ஏங்கினார்; காவலன்கால்மிசை விழுந்து, காவல் மாத் தேவரும் அழுதனர்,களிக்கும் சிந்தையார். |
|