பக்கம் எண் :

656சுந்தர காண்டம்

சுட -இறந்தான் என்ற வார்த்தை தனது மனத்தை எரித்தலால்; எரி உயிர்
த்து-
நெருப்புச் சுடர் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டு; புரம் சுட
வரிசிலைப் பொருப்பு வாங்கிய -
முப்புரத்தை எரிப்பதற்கு கட்டமைந்த
வில்லாகமேரு மலையை வளைத்த; பரம் சுடர் ஒருவனை - மேலான சோதி
வடிவினனான சிவபிரானை; பொருவும் பான்மையான் - ஒக்கின்ற தன்மை
உடையவனாய்; ஓங்கினான் - போருக்கு எழுந்தான்.

     அனுசன் -தம்பி.                                        (2)

5719.

ஏறினன்,விசும்பினுக்கு எல்லை காட்டுவ
ஆறு-இருநூறு பேய்பூண்ட ஆழித்தேர்;
கூறின கூறினசொற்கள் கோத்தலால்,
பீறின நெடுந்திசை; பிளந்தது அண்டமே.

     விசும்பினுக்குஎல்லை காட்டுவ - வானத்தினது மேல்எல்லையை
(இவ்வளவு என்று தனது உயர்ச்சியினால்) தெரிவிப்பனவான; ஆறு - இருநூறு
பேய் பூண்ட -
ஆயிரத்து இருநூறு பேய்கள் பூட்டப் பெற்றுள்ளதான;
ஆழித்தேர் ஏறினன் -
வலிய சக்கரங்களை உடைய தேரில் (மேகநாதன்)
ஏறினான்; கூறின கூறின சொற்கள் - (அங்ஙனம் ஏறிய அவன்) மிகுதியாகச்
சொன்ன வீர வார்த்தைகள்; கோத்தலால் நெடுந்திசை பீறின - ஒன்றோடு
ஒன்று தொடுத்து வந்தமையால், (அவ்வதிர்ச்சியால்) நெடிய திசைகள் எல்லாம்
பிளவுபட்டன; அண்டம் பிளந்தது - அண்ட கோளமும் பிளவுப்பட்டது.

     இந்திரசித்து,போருக்குச் சென்ற வேகமும் வீரமும் கூறப்பட்டது.
விசும்பினுக்கு எல்லைகாட்டுவ - ஆகாயத்தின் மேல் எல்லை வரை உயர்ந்து
விளங்கியது என்பது கருத்து.                                   (3)

அறுசீர் ஆசிரியவிருத்தம்

5720.

ஆர்த்தன,கழலும் தாரும் பேரியும், அசனி அஞ்ச;
வேர்த்து, உயிர்குலைய, மேனி வெதும்பினன்,
                           அமரர் வேந்தன்;
‘சீர்த்ததுபோரும்’ என்னா, தேவர்க்கும் தேவர் ஆய
மூர்த்திகள்தாமும், தம்தம் யோகத்தின் முயற்சி
                           விட்டார்.