பக்கம் எண் :

பாசப் படலம்657

     கழலும் தாரும்பேரியும் - இந்திரசித்துஅணிந்திருந்த வீரக்
கழல்களும் மாலைகளும் (அவனுடன் சென்ற) முரசங்களும்; அசனி அஞ்ச
ஆர்த்தன -
இடியும் அஞ்சிப் பின்னிடும்படி மிகுதியாக ஒலித்தன.
(அம்முழக்கம் கேட்டு); அமரர் வேந்தன் உயிர்குலைய மேனி வேர்த்து
வெதும்பினன் -
தேவர் தலைவனான  இந்திரன் உயிர் நடுங்க உடல்
வியர்த்து அச்சத்தால் வெதும்பி வருந்தினான்; தேவர்க்கும் தேவர் ஆய
மூர்த்திகள் தாமும் -
எல்லாத் தேவர்க்கும் தலைமைத் தேவர்களான
மும்மூர்த்திகளும்; போரும் சீர்த்தது என்னா - போர் உச்சநிலை அடைந்
ததுஎன்று; தம்தம் யோகத்தின் முயற்சி விட்டார் - அவரவர்
செய்தொழிலின்(படைத்தல், காத்தல், அழித்தல்) முயற்சியைக் கைவிட்டார்கள்.

     மேகநாதன்போருக்குப் புறப்பட்டதைக் கண்ட, இந்திரன், மும்மூர்த்திகள்
முதலாயோர் நிலை கூறப்பட்டது.                                (4)

5721.

தம்பியைஉன்னும்தோறும், தாரை நீர் ததும்பும்
                         கண்ணான்,
வம்பு இயல்சிலையை நோக்கி, வாய் மடித்து உருத்து
                         நக்கான்;
‘கொம்பு இயல்மாய வாழ்க்கைக் குரங்கினால்,
                         குரங்கா ஆற்றல்
எம்பியோதேய்த்தான் ? எந்தை புகழ் அன்றோ
                        தேய்ந்தது ?’ என்றான்.

     தம்பியைஉன்னும்தோறும் தாரை நீர்ததும்பும் கண்ணான் - 
தனதுதம்பி அக்கன் இறந்ததை நினைக்கும் பொழுதெல்லாம், தாரையாக நீர்
ஒழுகும்கண்களை உடைய மேகநாதன்; வம்பு இயல் சிலையை நோக்கி -
கட்டமைந்த தனது வில்லைப் பார்த்து; வாய் மடித்து உருத்து நக்கான் -
தன் வாயிதழை மடித்துக் கொண்டு, கோபத்துடன் சிரித்தான்; கொம்பு இயல்
மாய வாழ்க்கைக் குரங்கினால் -
மரக் கொம்புகளிலே உலாவுகின்ற
நிலையில்லாத வாழ்வை உடைய இந்த ஒரு குரங்கினால்; குரங்கா ஆற்றல்
எம்பியோ தேய்ந்தான் -
வளையாத வலிமை வாய்ந்த எனது தம்பியோ
அழிந்தான் ?(இல்லை); எந்தை புகழ் அன்றோ தேய்ந்தது - எனது
தந்தையாகிய இராவணனுடைய புகழ் அல்லவா மெலிவுற்று அழிந்தது என்று
கூறி வருந்தினான்.

     போருக்குச்செல்லும் மேநாதனின் எண்ணத்தைப் புலப்படுத்தியது.
குரங்கா - வளையாது.                                       (5)