பக்கம் எண் :

பாசப் படலம்659

     ஆய - அவ்வாறே(பன்னீராயிரம் என்னும் தொகையினதாய்);
மாதானைதான் வந்து அண்மியது அண்ம -
குதிரைப்படை தானும் வந்து
அங்குக் கூடியது. அவ்வாறு அப்படைகள் பலவும் வந்து கூடவும்; ஆண்மை
தீயவாள் நிருதர் வேந்தர் -
வீரம் நிறைந்த கொடிய வாள் ஏந்திய அரக்கர்
அரசர்கள்; சேர்ந்தவர் சேர - திரண்டு தன் அருகில் வந்து சேரவும்; அருவி
சோர் வயிரக்கண்ணான் -
அருவிபோல நீர் ஒழுகுகின்ற பகைமை கொண்ட
கண்களை உடைய இந்திரசித்து; ‘ஏ’ எனும் அளவில் - விரைவிலே; தேரில்
வந்தான் -
தேரில் ஏறி வந்து; இராவணன் இருந்த - இராவணன்
வசித்திருந்த; யாணர் வாயில் தோய் கோயில் புக்கான் - அழகிய வாயில்
பொருந்திய அரண்மனையினுள் புகுந்தான்.

     முன் பாடலில்வேற்படை முதலிய ஐந்தினைக் கூறி, இதனுள்
குதிரைப்படை தனித்துக் கூறப்பட்டது. அனைத்துப் படைகளும் தன்னை வந்து
நெருங்கியதும், இந்திரசித்து, இராவணனின் அரண்மனைக்குச் சென்றான்.
யாணர் - அழகு; தோய் - பொருந்திய.                          (7)

5724.

தாள் இணைவீழ்ந்தான், தம்பிக்கு இரங்குவான்;
                               தறுகணானும்
தோள் இணைபற்றி ஏந்தித் தழுவினன், அழுது
                               சோர்ந்தான்;
வாள் இணை நெடுங்கண் மாதர் வயிறு அலைத்து
                               அலறி மாழ்க,
மீளிபோல்மொய்ம்பினானும் விலக்கினன்;
                               விளம்பலுற்றான்;

     தாள் இணைவீழ்ந்தான் - (அரண்மனை புகுந்தஇந்திரசித்து)
இராவணனது இரு பாதங்களில் விழுந்து; தம்பிக்கு இரங்குவான் - தம்பி
அக்ககுமாரன் இறந்தமைக்குத் துயர் கொண்டு புலம்புவானான்; தறுகணானும்
-
அஞ்சாமை உடைய இராவணனும்; தோள் இணை பற்றி ஏந்தி -
இந்திரசித்துவின் இரண்டு தோள்களையும் பிடித்து எடுத்து; தழுவினன் அழுது
சோர்ந்தான் -
அவனைக் கட்டி அணைத்துக் கொண்டு தானும் அழுது
வருந்திச் சோர்வுற்றான்; இணைவாள் நெடுங்கண் மாதர் - இருவாள்கள்
போன்ற நெடுங்கண்களை உடைய அரக்கர் குல மகளிர்கள்; வயிறு அலைத்து
அலறி மாழ்க -
வயிற்றில் அடித்துக்