(அனுமன்) ஊறு - துன்பங்கள்; கடிது ஊறுவன - வேகமாக அடைகின்றன; ஊறுஇல் அறம் - அழிவில்லாத தருமத்தை; உன்னா - மதியாத; தேறல்இல் அரக்கர் - ஆராய்தல் இல்லாத அரக்கர்கள்; புரிதீமை அவைதீர - செய்கின்ற அந்ததத் தீமை நீங்க; ஏறும் வகை எங்குளது - (துன்பங்களிலிருந்து) ஏறுகின்ற வழி எங்கே இருக்கிறது? இராமஎன எல்லாம் மாறும் - இராம என்றுகூற எல்லாத் துன்பமும் (இன்பமாக) மாறும்; அதின் பிறிது மாறு இல் - அதைவிட வேறான பரிகாரம் இல்லை; என - என்று; மனத்திடை நினைத்தான் - மனத்திலே உறுதிப் படுத்திக்கொண்டான். அனுமன்,துன்பங்கள் அதிகமாக வருகின்றன. அவை நீங்க இராமநாமத்தைச் செபிக்க வேண்டும் என்று கருதினான். (88) அறுசீர் விருத்தம் 4829. | தசும்புடைக் கனக நாஞ்சில் கடிமதில்தணித்து நோக்கா அசும்புடைப்பிரசத் தெய்வக் கற்பகநாட்டை அண்மி விசும்பிடைச்செல்லும் வீரன் விலங்கிவேறு இலங்கை மூதூர்ப் பசும்சுடர்ச்சோலைத்து ஆங்கோர் பவளமால்வரையில் பாய்ந்தான். |
பிரசம் அசும்புடை- தேன்கசிதலைப் பெற்ற; தெய்வக் கற்பக நாட்டை அண்மி - கற்பக மரங்கள் செழித்த தேவலோகத்தை எட்டி; விசும்பு இடைச் செல்லும் வீரன் - ஆகாயத்தே செல்லும் அனுமன்; தணித்து - வேகத்தைக் குறைத்து; தசும்புடை - குடங்களைப் பெற்றுள்ள; கனக நாஞ் சில்- பொன்மயமான ஏப்புழை அமைந்த; கடிமதில் - காவலுடன்கூடியமதிலை;நோக்கா - பார்த்து; வேறு விலங்கி - செல்லும் வழியை மாற்றிக் கொண்டு;மூதூர் இலங்கை - பழைய ஊராகிய இலங்கையிலுள்ள; பசும்சுடர்சோலைத்து - பசுமையான ஒளியை உடைய; ஆங்கு ஓர் - சோலையின் ஒருபக்கத்தில் உள்ள; பவளமால் வரையில் - பவளமலையில்; பாய்ந்தான் -குதித்தான். |