பக்கம் எண் :

660சுந்தர காண்டம்

கொண்டு கதறிமயங்கிச் சோர; மீளிபோல் மொய்ம்பினானும் - சிங்கம்
போன்ற வலிமை உடைய இந்திரசித்தும்; விலக்கினன் விளம்பலுற்றான் -
அவர்களை விலக்கி, தந்தையை நோக்கிப் பேசத் தொடங்கினான்.        (8)

5725.

‘ஒன்று நீஉறுதி ஓராய்; உற்றிருந்து உளையகிற்றி;
வன் திறல்குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்தும்,
                                 அன்னோ !
“சென்று நீர்பொருதிர்” என்று, திறத் திறம்
                             செலுத்தி, தேயக்
கொன்றனை நீயேஅன்றோ, அரக்கர்தம் குழுவை
                             எல்லாம் ?

     நீ உறுதி ஒன்றும்ஓராய் - நீ, நன்மை தரத்தக்கதான ஒன்றையும்
ஆலோசிக்கின்றாயல்லை; உற்றிருந்து உளையகிற்றி - நடந்ததை அநுபவித்து
வாளா இருந்து வருந்துகின்றாய்; வன்திறல் குரங்கின் ஆற்றல் மரபுளி
உணர்ந்தும் -
கொடிய வலிமை உடைய குரங்கினது வலியின் தன்மையை
முறைப்படி உணர்ந்திருந்தும்; நீர் சென்று பொருதிர் என்று - நீங்கள்
போய்அக்குரங்குடன் போர் செய்யுங்கள் என்று; திறம் திறம் செலுத்தி -
வரிசைவரிசையாக அனுப்பி; அரக்கர்தம் குழுவை எல்லாம் - அரக்கர்
கூட்டத்தைஎல்லாம்; நீயே அன்றோ தேயக் கொன்றனை - நீ அல்லவா
குறைந்தொழியும்படி கொன்று விட்டாய்.

     ‘அன்னோ’ என்பதுகழிவிரக்கத்தைக் காட்டுவது. மரபுளி உணர்தல்.
அனுமன் கடல் கடந்து வந்து அசோகவனத்தை அழித்தது முதலாக நடந்த
செயல்களை அறிதல்.                                       (9)

5726.

‘கிங்கரர், சம்புமாலி, கேடு இலா ஐவர் என்று இப்
பைங் கழல்அரக்கரோடும் உடன் சென்ற பகுதிச்
                                    சேனை,
இங்கு ஒருபேரும்மீண்டார் இல்லையேல், குரங்கு
                             அது, எந்தாய் !
சங்கரன், அயன்,மால் என்பார்தாம் எனும் தகையது
                             ஆமே !

     எந்தாய் -எனதுதந்தையே !; கிங்கரர், சம்புமாலி - கிங்கரர் என்
னும்போர் வீரர்களும், சம்புமாலி என்பவனும்; கேடு இலா