கொண்டு கதறிமயங்கிச் சோர; மீளிபோல் மொய்ம்பினானும் - சிங்கம் போன்ற வலிமை உடைய இந்திரசித்தும்; விலக்கினன் விளம்பலுற்றான் - அவர்களை விலக்கி, தந்தையை நோக்கிப் பேசத் தொடங்கினான். (8) 5725. | ‘ஒன்று நீஉறுதி ஓராய்; உற்றிருந்து உளையகிற்றி; வன் திறல்குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்தும், அன்னோ ! “சென்று நீர்பொருதிர்” என்று, திறத் திறம் செலுத்தி, தேயக் கொன்றனை நீயேஅன்றோ, அரக்கர்தம் குழுவை எல்லாம் ? |
நீ உறுதி ஒன்றும்ஓராய் - நீ, நன்மை தரத்தக்கதான ஒன்றையும் ஆலோசிக்கின்றாயல்லை; உற்றிருந்து உளையகிற்றி - நடந்ததை அநுபவித்து வாளா இருந்து வருந்துகின்றாய்; வன்திறல் குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்தும் - கொடிய வலிமை உடைய குரங்கினது வலியின் தன்மையை முறைப்படி உணர்ந்திருந்தும்; நீர் சென்று பொருதிர் என்று - நீங்கள் போய்அக்குரங்குடன் போர் செய்யுங்கள் என்று; திறம் திறம் செலுத்தி - வரிசைவரிசையாக அனுப்பி; அரக்கர்தம் குழுவை எல்லாம் - அரக்கர் கூட்டத்தைஎல்லாம்; நீயே அன்றோ தேயக் கொன்றனை - நீ அல்லவா குறைந்தொழியும்படி கொன்று விட்டாய். ‘அன்னோ’ என்பதுகழிவிரக்கத்தைக் காட்டுவது. மரபுளி உணர்தல். அனுமன் கடல் கடந்து வந்து அசோகவனத்தை அழித்தது முதலாக நடந்த செயல்களை அறிதல். (9) 5726. | ‘கிங்கரர், சம்புமாலி, கேடு இலா ஐவர் என்று இப் பைங் கழல்அரக்கரோடும் உடன் சென்ற பகுதிச் சேனை, இங்கு ஒருபேரும்மீண்டார் இல்லையேல், குரங்கு அது, எந்தாய் ! சங்கரன், அயன்,மால் என்பார்தாம் எனும் தகையது ஆமே ! |
எந்தாய் -எனதுதந்தையே !; கிங்கரர், சம்புமாலி - கிங்கரர் என் னும்போர் வீரர்களும், சம்புமாலி என்பவனும்; கேடு இலா |