| கண்ணடி வைத்ததுஅன்ன இலங்கையைத் தெரியக் கண்டான். |
(அனுமன்) அடிமண் உற்று- கீழ்ப்பாகம் பூமியில் பொருந்தி; மீதுவான் உறும் - மேலே உள்ள ஆகாயத்தைப் பொருந்தியிருக்கும்; வரம்பின் தன்மை - எல்லையின் தன்மை; எண்அடி அற்ற - நினைக்க வியலாத; குன்றில் - பவளமலையில்; நிலைத்து நின்று - ஊன்றி நின்றுகொண்டு; விண்ணிடை உலகம் - வானத்தில் உள்ள தேவலோகம்; என்னும் மெல்லியல் - என்னும் பெண்ணானவள்; மேனி நோக்க - தன்னுடைய உடம்பைப் பார்ப்பதற்கு; கண்ணடி வைத்தது அன்ன - கண்ணாடி வைத்தாற்போன்று; இலங்கையை - இலங்கை மாநகரை; எய்த நோக்கி - நன்றாக ஆராய்ந்து; தெரியக் கண்டான் - கண்களாற் பார்த்தான். வரம்பு - எல்லை(சிகரம்) எய்த நோக்கி - நன்றாக ஆராய்ந்து இருவரை எய்த நோக்கி கம்ப. 375) (91) 4832. | நல்நகர்அதனை நோக்கி நளினக் கைமறித்து ‘நாகர் பொன்னகர் இதனைஒக்கும் என்பதுபுல்லிது அம்மா அந்நகர் இதனில்நன்றேல் அண்டத்தைமுழுதும் ஆள்வான் இந்நகர் இருந்துவாழ்வான் ? இது அதற்குஏது என்றான்.+ |
(அனுமன்) நல்நகர்அதனை நோக்கி - அழகிய இலங்கை மாநகரைப் பார்த்து; நளினக்கை மறித்து - தாமரை போன்ற கையை அசைத்து; நாகர் பொன்நகர்- தேவர்களின் அமராவதி நகரானது; இதனை ஒக்கும் என்பது - இந்தஇலங்கையைப் போன்றிருக்கும் என்று கூறுவது; புல்லிது - அறிவற்றது;அம்மா - இங்ஙனம் கூறுவது அதிசயம்; இதனில்- இந்த இலங்கையை விட;அந்நகர் நன்றேல் - அழகுடையதாயிருக்குமானால்; அண்டத்தை முழுதும்ஆள்வான் - அண்டங்கள் யாவற்றையும் ஆளும் இராவணன்; இந்நகர்இருந்து வாழ்வான் ? - இந்த இலங்கையிலிருந்து வாழ்வானோ; |