பக்கம் எண் :

708சுந்தர காண்டம்

     மை தடம்கண்ணியர் - மையிட்ட பெரியகண்களை
உடையவர்களானமகளிரும்; மைந்தர் - ஆடவரும்; யாவரும் - ஆகிய
எல்லோரும்;பைத்தலை அரவு என கனன்று - படத்தோடு கூடிய தலையை
உடையபாம்பு போலக் கோபம் கொண்டு; பைதலை - இந்தக் குரங்குப்
பயலை;இத்தனை பொழுது கொண்டு இருப்பதோ எனா - இவ்வளவு
நேரம்உயிருடன் வைத்துக் கொண்டு நாம் வாளா இருப்பதோ என்று கூறி;
மொய்த்தனர் -
அனுமனைச் சூழ்ந்து மொய்த்துக் கொண்டனர்; சிலர்
கொலை செய முயல்கின்றார் -
சில அரக்கர்கள், அனுமனைக் கொலை
செய்ய முயற்சி செய்வாராயினர்.

     கண்ணியர்மைந்தர் யாவரும் மொய்த்தனர்; சிலர் கொலை செய்ய
முயன்றனர் என்பதாம்.                                          (2)

5807.

‘நச்சு அடைபடைகளால் நலியும் ஈட்டதோ,
வச்சிர உடல் ?மறி கடலின்வாய் மடுத்து,
உச்சியின்அழுத்துமின், உருத்து; அது அன்றுஎனின்,
கிச்சிடை இடும்’எனக் கிளக்கின்றார் சிலர்.

     சிலர் - வேறுசிலர்;வச்சிர உடல் - இந்தக் குரங்கின் வயிரம் போன்ற
உடல்;  நச்சு அடை படைகளால் நலியும் ஈட்டதோ ? - விஷம் தடவிய
ஆயுதங்களைக் கொண்டு வருத்தி அழிக்கப்படத் தக்கதோ?; மறி கடலின்
வாய் மடுத்து உச்சியின் உருத்து அழுத்துமின் -
(அன்று என்றபடி)
மடங்கிவிழும் கடலினிடம் தள்ளி (வெளிக்கிளம்பாதபடி) இதனைத் தலை
உச்சியில்நன்றாக அழுத்துங்கள்; அது அன்று எனின் - அவ்வாறு செய்ய
முடியவில்லை என்றால்; கிச்சிடை இடும் - நெருப்பிடை இட்டுக்
கொல்லுங்கள்; என கிளக்கின்றார் - என்று சொல்வாராயினர்.

     கிச்சு -நெருப்பு; கன்னடச்சொல்.                            (3)

5808.

‘எந்தையை,எம்பியை, எம் முனோர்களைத்
தந்தனை போக’என, தடுக்கின்றார் பலர்;
‘அந்தரத்துஅமரர்தம் ஆணையால், இவன்
வந்தது’ என்று,உயிர்கொள மறுகினார் பலர்.

     பலர் - வேறு பலர்;எந்தையை எம்பியை - ‘எமது தந்தையையும்,
எமது தம்பியையும்; எம்முன்னோர்களை - எமது தமையன்மார்களையும்;
தந்தனை போகு எனா -
மீளக்