பக்கம் எண் :

பிணி வீட்டு படலம்709

கொணர்ந்து கொடுத்துஅப்புறம் செல்’ என்று சொல்லி (அனுமனை);
தடுக்கின்றார் -
மறித்துக் கொள்பவரானார்கள்; பலர் - வேறு பலர்; இவன்
அந்தரத்து அமரர்தம் ஆணையால் வந்தது என்று -
இவன், வானில்
உள்ள தேவர்களின் கட்டளையினால் இங்கு வந்ததாகும் என்று மாறாக
எண்ணி; உயிர் கொள மறுகினார் - அந்த அனுமன் உயிரைப் பற்றிப் பறிக்
கமுடியாது வருந்தினார்கள்.

     தேவர்கள்அரக்கர்களுக்குப் பகைவர்களாதலால், அவர்களது
ஆணையின் படி அனுமன் இலங்கைக்கு வந்திருக்கலாம் என்பது பல
அரக்கர்களது எண்ணம். மறுகுதல் - மனம் குழம்புதல்; இவனை எங்ஙனம்
கொல்வது என்று மனம் கலங்கினர் பலர்.                         (4)

5809.

‘ஓங்கல்அம் பெரு வலி உயிரின் அன்பரை
நீங்கலம்;இன்றொடு நீங்கினாம்; இனி
ஏங்கலம்; இவன்சிரத்து இருந்து அலால் திரு
வாங்கலம்’ என்றுஅழும் மாதரார் பலர்.

     ஓங்கல் அம்பெருவலி உயிரின் அன்பரை - ‘மலை போன்ற மிக்க
வலிமையும் அழகும் உடைய எமது உயிர் அனைய கணவன்மார்களை;
நீங்கலம் -
இதுவரை நாங்கள் பிரிந்திலோம்; இன்றொடு நீங்கினாம் -
(இவனால்) இன்றொடு நீங்கினவர்களானோம்; இனி ஏங்கலம் - இனி யாம்
ஏக்கமுற்று வருந்தமாட்டோம்; இவன் சிரத்து இருந்து அலால்
திருவாங்கலம் -
இவன் தலையையே பீடமாகக் கொண்டு உட்கார்ந்து
இருத்தலால், எங்கள் திருமாங்கல்யத்தை வாங்கி அகற்ற மாட்டோம்’; என்று
அழும் மாதரார் பலர் -
என்று சொல்லி அழும் அரக்க மகளிர் பலராவர்.

     ‘தாலி வாங்கும்துக்கச் சடங்கை, குரங்கினைக் கொன்று, அதன்
தலையின் மேல் தான் நடத்துவோம்’ என்று அரக்க மகளிர் வீராவேசத்துடன்
கூறினர் என்க.                                           (5)

5810.

கொண்டனர்எதிர் செலும் கொற்ற மா நகர்,
அண்டம் உற்றது,நெடிது ஆர்க்கும் ஆர்ப்புஅது-
கண்டம் உற்றுளஅருங் கணவர்க்கு ஏங்கிய
குண்டலமுகத்தியர்க்கு உவகை கூரவே.

     கொண்டனர் -அனுமனைப்பற்றி இழுத்துக் கொண்டு
செல்பவர்களுக்கு; எதிர் செலும் கொற்ற மாநகர் - எதிரே