| எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர் ஏழையர் வயிறு அலைத்துஇரியலின், மயங்கினார் பலர். |
முயிறு அலைத்து எழுமுது மரத்தின் - எறும்பினங்களால் சூழப்பெற்று வளர்ந்த ஒரு பழைய மரத்தைப் போல; மொய்ம்பு தோள் - அனுமனது வலிய தோள்களை; கயிறு அலைப் புண்டது கண்டும் - நாகபாசம் கட்டி வருத்தியிருப்பதைப் பார்த்தும்; காண்கிலாது - (பயத்தினால்) பார்க்காமல்; ஏழையர் வயிறு அலைத்து இரியலின் - பேதையர்களான அரக்கிமார்கள் (குரங்கு இங்கும் வந்துவிட்டதோ என்று அஞ்சி) வயிற்றைப் பிசைந்து கொண்டு ஓடுதலின்; எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர் பலர்- கோரைப் பற்கள் அச்சத்தால் நடுங்கி மேற்கிளம்பும் உதட்டை உடைய அரக்கர் பலர்; மயங்கினார் - (இக்குரங்கு என்ன தீமை செய்யத் தொடங்கியதோ என்று) திகைப்புற்றார்கள். முயிறு - ஒருவகைச்செவ்வெறும்பு. இது நாகபாசத்துக்கும் முதுமரம், அனுமன் தோளுக்கும் உவமைகள். (8) 5813. | ஆர்ப்பு உறஅஞ்சினர்; அடங்கினார் பலர்; போர்ப்புறச்செயலினைப் புகல்கின்றார் பலர்; பார்ப்புற,பார்ப்புற, பயத்தினால் பதைத்து, ஊர்ப் புறத்துஇரியலுற்று ஓடுவார், பலர். |
பலர், ஆர்ப்புஉற அஞ்சினர் அடங்கினார் - பல அரக்கர்கள், நகரில் ஆரவாரம் உண்டாக, (அதனைக் கேட்டு) பயந்தவர்களாய் அடங்கியிருந்தனர்; பலர் போர் புறச் செயலினை புகல்கின்றார் - வேறு பலஅரக்கர்கள், (அனுமான்) போரில் செய்த வீரச் செயல்களை எடுத்துக் கூறுவாராயினார்; பலர் பார்ப்புற பார்ப்புற - மற்றும் பல அரக்கர்கள், அனுமனைப் பார்க்கும் போதெல்லாம்; பயத்தினால் பதைத்து ஊர்ப் புறத்து இரியலுற்று ஓடுவார் - அச்சத்தால் நடுங்கி, ஊருக்கு வெளியே சிதறி ஓடுபவரானார்கள். அனுமனைக் கண்டஅரக்கர் பலரின் செயல்கள் கூறப்பட்டன. (9)
5814. | ‘காந்துறுகதழ் எயிற்று அரவின் கட்டு, ஒரு பூந் துணர்சேர்த்தெனப் பொலியும், வாள் முகம்; | |