பக்கம் எண் :

712சுந்தர காண்டம்

 

தேர்ந்து, உறுபொருள் பெற எண்ணி, செய்யுமின்;
வேந்து உறல்பழுது’ என விளம்புவார், சிலர்.

     காந்து உறு, கதழ்எயிற்று - எரிக்கும்தன்மையுள்ளதும்
கொடுமையுள்ளதுமான நச்சுப்பற்களை உடைய; அரவின் கட்டு -
பாம்பினாலாகிய இந்தப் பிணிப்பு; ஒரு பூந்துணர் சேர்த்து என - ஒரு பூ
மாலை கொண்டு கட்டினது போல; வாள் முகம் பொலியும் - ஒளியுள்ள
(இக்குரங்கினது) முகம் விளங்குகின்றது; தேர்ந்து - (ஆதலால்) விரைவுபடாது
ஆலோசித்து; உறுபொருள் பெற எண்ணி - நல்ல பயனைப் பெறுமாறு
சிந்தித்து; செய்யுமின் -  (அதற்கு அப்பாற் செய்ய வேண்டிய காரியத்தைச்)
செய்யுங்கள்; வேந்து உறல் பழுது - இந் நிலையில் இக்குரங்கு) அரசனிடம்
போய்ச் சேர்தல் பயனுடையதன்று; என, விளம்புவார் சிலர் - என்று சில
அரக்கர்கள் சொல்வார்கள்.

     பிரம்மாத்திரப்பிணிப்பு, அனுமனுக்குப் பூமாலை பூண்டது போன்றுதான்
இருந்தது; வருத்தமி்ல்லை என்பது கருத்து.                        (10)

5815.

‘ஒளி வரும் நாகத்துக்கு ஒல்கி அன்று, தன்
எளிவரவு; இன்றுஇதன் எண்ணம் வேறு’ எனா,
‘களி வருசிந்தையால் காண்டி ! நங்களைச்
சுளிகிலையாம்’எனத் தொழுகின்றார், சிலர்.

     இன்று - இப்பொழுது;தன் எளி வரவு - இக்குரங்கு கொண்டுள்ள
எளிமைத் தன்மை; ஒளிவரும் நாகத்துக்கு ஒல்கி அன்று - ஒளி
பொருந்தியநாக பாசத்துக்குத் தளர்ச்சியுற்றதனால் அன்று; இதன் எண்ணம்
வேறு எனா-
இக்குரங்கு கொண்டுள்ள எண்ணம் வேறாயிருக்கும் என்று
கருதி,(அனுமனை நோக்கி); களி வரு சிந்தையால் காண்டி - மகிழ்ச்சி
பொருந்தியமனத்தோடு எங்களைப் பார்ப்பாய்; நங்களை சுளி கிலை என -
எங்களைக்கோபிக்காதே என்று சொல்லி; சிலர் தொழுகின்றார் - சில
அரக்கர்கள்அனுமனைத் தொழுது வணங்குவாராயினர்.              (11)

5816.

பைங் கழல்அனுமனைப் பிணித்த பாந்தளை,
கிங்கரர்,ஒருபுடைக் கிளர்ந்து பற்றினார்-
ஐம்பதினாயிரர்,அளவு இல் ஆற்றலர்,
மொய்ம்பினின் எறுழ் வலிக் கருளன் மும்மையார்.