| தேர்ந்து, உறுபொருள் பெற எண்ணி, செய்யுமின்; வேந்து உறல்பழுது’ என விளம்புவார், சிலர். |
காந்து உறு, கதழ்எயிற்று - எரிக்கும்தன்மையுள்ளதும் கொடுமையுள்ளதுமான நச்சுப்பற்களை உடைய; அரவின் கட்டு - பாம்பினாலாகிய இந்தப் பிணிப்பு; ஒரு பூந்துணர் சேர்த்து என - ஒரு பூ மாலை கொண்டு கட்டினது போல; வாள் முகம் பொலியும் - ஒளியுள்ள (இக்குரங்கினது) முகம் விளங்குகின்றது; தேர்ந்து - (ஆதலால்) விரைவுபடாது ஆலோசித்து; உறுபொருள் பெற எண்ணி - நல்ல பயனைப் பெறுமாறு சிந்தித்து; செய்யுமின் - (அதற்கு அப்பாற் செய்ய வேண்டிய காரியத்தைச்) செய்யுங்கள்; வேந்து உறல் பழுது - இந் நிலையில் இக்குரங்கு) அரசனிடம் போய்ச் சேர்தல் பயனுடையதன்று; என, விளம்புவார் சிலர் - என்று சில அரக்கர்கள் சொல்வார்கள். பிரம்மாத்திரப்பிணிப்பு, அனுமனுக்குப் பூமாலை பூண்டது போன்றுதான் இருந்தது; வருத்தமி்ல்லை என்பது கருத்து. (10) 5815. | ‘ஒளி வரும் நாகத்துக்கு ஒல்கி அன்று, தன் எளிவரவு; இன்றுஇதன் எண்ணம் வேறு’ எனா, ‘களி வருசிந்தையால் காண்டி ! நங்களைச் சுளிகிலையாம்’எனத் தொழுகின்றார், சிலர். |
இன்று - இப்பொழுது;தன் எளி வரவு - இக்குரங்கு கொண்டுள்ள எளிமைத் தன்மை; ஒளிவரும் நாகத்துக்கு ஒல்கி அன்று - ஒளி பொருந்தியநாக பாசத்துக்குத் தளர்ச்சியுற்றதனால் அன்று; இதன் எண்ணம் வேறு எனா- இக்குரங்கு கொண்டுள்ள எண்ணம் வேறாயிருக்கும் என்று கருதி,(அனுமனை நோக்கி); களி வரு சிந்தையால் காண்டி - மகிழ்ச்சி பொருந்தியமனத்தோடு எங்களைப் பார்ப்பாய்; நங்களை சுளி கிலை என - எங்களைக்கோபிக்காதே என்று சொல்லி; சிலர் தொழுகின்றார் - சில அரக்கர்கள்அனுமனைத் தொழுது வணங்குவாராயினர். (11) 5816. | பைங் கழல்அனுமனைப் பிணித்த பாந்தளை, கிங்கரர்,ஒருபுடைக் கிளர்ந்து பற்றினார்- ஐம்பதினாயிரர்,அளவு இல் ஆற்றலர், மொய்ம்பினின் எறுழ் வலிக் கருளன் மும்மையார். |
|