மாடங்களின்கீழ்ப் பகுதியில் பாதாளவுலகமும், மேற்பகுதியில் விண்ணுலகமும் தங்கியுள்ளன என்று கூறும்படி நிலவறைகளையும் மேல் உப்பரிகைகளையும் பெற்றுள்ளது என்பது கருத்து. மாகால் தென்றல்என நின்ற என்றதனால் மாடங்களின் உறுதி தெரிகிறது. பண்ப - பண்பை உடைய மாளிகைகள் - எழுவாய். நின்ற - பலவின்பால் வினைமுற்று. பயனிலை. பண்பநின்ற என்று கூட்டிப் பார்க்கவும். (2) 4837. | மாகாரின் மின்கொடி மடக்கினர் அடுக்கி; மீகாரம்எங்கணும் நறுந்துகள் விளக்கி ஆகாய கங்கையினைஅங்கையினின் அள்ளிப் பாகுஆய;செஞ்சொலவர் வீசபடு காரம். |
செஞ்சொலவர் -செவ்வியசொற்களைப் பேசும் மகளிர்; மாகாரின் - பெரிய மேகத்தில் உள்ள; மின்கொடி - மின்னல் கொடிகளை; மடக்கினர் அடுக்கி - மடக்கி ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து அடுக்கி; மீகாரம் எங்கணும் - உயர்ந்த மாளிகையின் எல்லாப் பகுதியினும்(உள்ள); நறுந்துகள் விளக்கி - நறுமணம் வீசும்மகரந்தக் குப்பைகளைத் துடைத்து (பிறகு); அங்கையினில் ஆகாயகங் கையினை - கைகளால் ஆகாய கங்கைநீரை; அள்ளி - முகந்து எடுத்து;வீசுபடுகாரம் - தெளிக்கின்ற திறமை; பாகுஆய - அழகாக உள்ளது. படுகாரம் - பாகாயஎனக்கூட்டுக. படுகாரம் என்பதற்குப் பெரிய வீடு என்று பொருள்கூறி அது அழகாக உள்ளது என்றும் கூறுவர். மேல்தளங்களில் உள்ள குங்குமத் துகள்களை விளக்கி, ஆகாய கங்கை நீரைக் கையாலே முகந்து தெளிக்கும் சாமர்த்தியம் அழகாயது என்பது பழைய உரை. (3) கலிநிலைத்துறை 4838. | பஞ்சிஊட்டிய, பரட்டுஇசைக் கிண்கிணிப் பதுமச் செஞ்செவிச்செழும் பவளத்தின் கொழுஞ்சுடர் சிதறி மஞ்சின் அஞ்சனநிறம் மறைத்து, அரக்கியர் வடித்த அம்சில்ஓதியோடு உவமைய ஆக்குற அமைவ. |
பஞ்சி ஊட்டிய -செம்பஞ்சுக் குழம்பு பூசப்பெற்றதும்; பரட்டு இசை கிண்கிணி - கெண்டைக்காலில் அமைந்த கிண்கிணியோடு கூடியதும் (ஆகிய); பதுமம் - தாமரை போன்ற பாதங்களின்; |