| மோதினன்;மோத, முனிந்தார் ஏதியும் நாளும்இழந்தார். |
மாதிரம் வாலின்வளைத்தான் - எல்லாத் திசைகளையும்தனது வாலினால் வளைத்துக் கொண்ட அனுமன்; பாதவம் ஒன்று பகுத்தான் - ஒருமரத்தைப் பெயர்த்தெடுத்து; மோதினன் - அம்மரத்தால் அரக்கர்களை அடித்தான்; மோத முனிந்தார் - அடித்ததனால் கோபம் கொண்டு வந்தவர்களான அந்த அரக்கர்கள்; ஏதியும் நாளும் இழந்தார் - தமது ஆயுதங்களையும் வாழ்நாளையும் இழந்தார்கள். பாதவம் - மரம்;ஏதி - படைக்கலம். (55) 5998. | நூறிடமாருதி, நொந்தார் ஊறிட, ஊன் இடுபுண்ணீர், சேறு இட, ஊர் அடுசெந் தீ ஆறிட, ஓடினதுஆறாய். |
மாருதி நூறிடநொந்தார் - அனுமன் அவ்வாறு அடிக்க வருந்தினவர்களான அரக்கர்கள்; ஊறு இட ஊன் இடு புண்ணீர் சேறு இட - காயம் அடைய அதனால், அவர் உடம்பினின்றும் பெருகிய இரத்தமானது, சேற்றை உண்டாக்க; ஊர் அடு செந்தீ ஆறிட ஆறாய் ஓடினது - அவ்வூரை எரித்த சிவந்த நெருப்பு தணியும் படி ஆறாகப் பெருகிற்று. அனுமனால்மோதுண்ட அரக்கரின் இரத்தப் பெருக்கு பற்றிக் கூறப்பட்டது. (56) 5999. | தோற்றினர் துஞ்சினர் அல்லார் ஏற்று இகல்வீரர், எதிர்ந்தார்; காற்றின் மகன்,கலை கற்றான், கூற்றினும் மும்மடி கொன்றான். |
துஞ்சினர்அல்லோர் தோற்றினர் ஏறு இகல்வீரர் - இறந்தவர்கள் போக அங்குத் தென்பட்டவர்களான ஆண்சிங்கம் போன்ற வீரர்கள்; எதிர்ந்தார் - அனுமனை எதிர்த்தார்கள்; காற்றின் மகன் கலை கற்றான் - வாயு தேவன் மகனும் எல்லாக்கலைகளையும் கற்றவனுமாகிய அனுமன்; கூற்றினும் மும்மடி கொன்றான் - யமனைவிட மூன்று மடங்கு அவர்களைக் கொன்றுவிட்டான். (57) |