அடித்தான்; எற்ற -அவ்வாறு தாக்கியதனால்; உற்று எழுவோரும் உலந்தார்- அடிபட்டு பொர முனைந்து எழுந்த வீரர்களும் அழிந்தார்கள். ‘எழுவோர்’ - ஏழுவீரர்கள் என்றும், இவர்கள் அமைச்சர்களின் மக்கள் என்றும் பொருள் விளக்கம் கொடுக்கலாம். 51-ம் பாடலில் ஓர் எழு வீரர் உயர்ந்தார் ? என்ற தொடரை நோக்கும் போது எழுவோர் ? என்பதற்கு ஏழுவீரர்கள் எனப் பொருள் கொள்வது பொருத்தமே. (60) பிராட்டியின்திருவடிகளை வணங்கி, அனுமன் மீள, அழலும்மறைதல் 6003. | விட்டுஉயர் விஞ்சையர், ‘வெந் தீ வட்ட முலைத் திருவைகும் புள் திரள்சோலை புறத்தும் சுட்டிலது’ என்பதுசொன்னார். |
விட்டு உயர்விஞ்சையர் - அவ்விடம் விட்டு மேலேசென்ற வித்தியாதரர்; வெம் தீ - அனுமன் வாலில் வைத்த கொடிய நெருப்பு, (அனைத்தையும் எரித்த நெருப்பு); வட்ட முலை திரு வைகும் புள் திரள் சோலை புறத்தும் சுட்டிலது - வட்டமான முலையை உடைய திருமகள் (சீதை) இருக்கின்ற பறவைக் கூட்டம் நிறைந்த சோலையின், வெளியிடத்தைக் கூட சுடவில்லை; என்பது சொன்னார் - என்ற செய்தியை வியப்பாகத் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். (61) 6004. | வந்தவர்சொல்ல மகிழ்ந்தான்; வெந் திறல்வீரன் வியந்தான்; ‘உய்ந்தனென்’என்ன, உயர்ந்தான், பைந்தொடிதாள்கள் பணிந்தான். |
வந்தவர் சொல்ல- (வானத்தில்) வந்தவர்களான வித்தியாதரர் இவ்வாறுசொல்ல; வெம் திறல் வீரன் - (அது கேட்டு) ஆண்மை மிக்க வீரனானஅனுமன்; மகிழ்ந்தான் - மகிழ்ச்சி கொண்டு; வியந்தான் - வியப்படைந்து;உய்ந்தனன் என்ன உயர்ந்தான் - (தீ வினையினின்று யான்) தப்பினேன்என்று எண்ணி, அவ்விடம் விட்டு மேலே எழுந்தவனாகிச் சென்று; பைந்தொடி தாள்கள் பணிந்தான் - பசுமையான பொன் வளையல்களை அணிந்தபிராட்டியின் திருவடிகளில் பணிந்து வணங்கினான். |