பக்கம் எண் :

824சுந்தர காண்டம்

 

வீங்கினன்,உலகை எல்லாம் விழுங்கினன் என்ன;
                                     வீரன்
பூங் கழல் தொழுதுவாழ்த்தி, விசும்பிடைக் கடிது
                                     போனான்.

     விரைவின்நீங்குவென் என்னும் நினைவினன் - சீக்கிரத்தில் இந்த
இலங்கையினின்றும் போவேன் என்கின்ற எண்ணம் உடையவனாய்; ஆங்கு
மருங்கு நின்றது ஒரு குடுமிக்குன்றை -
அந்த இலங்கையின் அருகேயிருந்த
சிகரத்தை உடைய ஒரு மலையை; அருக்கனின் அணைந்த ஐயன் -
சூரியனைப் போன்று சென்று சேர்ந்த அனுமன்; உலகை எல்லாம்
விழுங்கினன் என்ன வீங்கினன் -
எல்லா உலகங்களையும் உட்
கொண்டவனான திருமால் போன்று தன் வடிவம் பூரித்து நின்று; வீரன்
பூங்கழல் தொழுது -
இரகு குல வீரனான இராமபிரானது அழகிய
திருவடிகளை, (தனது மனத்தால் நினைத்து) வணங்கி்த் துதித்து; விசும்பிடை
கடிது போனான் -
ஆகாய வழியாக விரைவில் சென்றான்.           (1)

6008.

மைந்நாகம்என்ன நின்ற குன்றையும், மரபின் எய்தி,
கைந் நாகம்அனையோன் உற்றது உணர்த்தினன்,
                           கணத்தின் காலை,
பைந் நாகம்நிகர்க்கும் வீரர் தன் நெடு வரவு
                            பார்க்கும்,
கொய்ந் நாகம்நறுந் தேன் சிந்தும், குன்றிடைக்
                          குதியும் கொண்டான்.

     கை நாகம்அனையோன் - துதிக்கையை உடைய யானை
போன்றவனான அனுமன்; மைநாகம் என்ன நின்ற குன்றையும் - மை நாகம்
என்று சொல்லப் படுகின்ற இடை நின்ற மலையையும்; மரபின் எய்தி உற்றது
உணர்த்தினன் -
(முன் அதனிடம் சொல்லி வந்த) முறைப்படி அடைந்து,
இலங்கையில் நடந்த நிகழ்ச்சிகளை அதனிடம் கூறி; கணத்தின் காலை தன்
நெடும் வரவு பார்க்கும் -
ஒரு கணப் பொழுதிலே, நெடு நேரமாகத் தனது
வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்; பை நாகம் நிகர்க்கும் - படம்
எடுத்து எழுந்து நோக்கும் பாம்பு போன்ற; வீரர் - அங்கதன் முதலிய
வானரவீரர்கள் நின்ற; கொய் நாகம் நறுந்தேன் சிந்தும் குன்றிடை -
பறித்துஎடுக்கக் கூடிய சுர புன்னை மரங்களின் மலர்கள்