| வீங்கினன்,உலகை எல்லாம் விழுங்கினன் என்ன; வீரன் பூங் கழல் தொழுதுவாழ்த்தி, விசும்பிடைக் கடிது போனான். |
விரைவின்நீங்குவென் என்னும் நினைவினன் - சீக்கிரத்தில் இந்த இலங்கையினின்றும் போவேன் என்கின்ற எண்ணம் உடையவனாய்; ஆங்கு மருங்கு நின்றது ஒரு குடுமிக்குன்றை - அந்த இலங்கையின் அருகேயிருந்த சிகரத்தை உடைய ஒரு மலையை; அருக்கனின் அணைந்த ஐயன் - சூரியனைப் போன்று சென்று சேர்ந்த அனுமன்; உலகை எல்லாம் விழுங்கினன் என்ன வீங்கினன் - எல்லா உலகங்களையும் உட் கொண்டவனான திருமால் போன்று தன் வடிவம் பூரித்து நின்று; வீரன் பூங்கழல் தொழுது - இரகு குல வீரனான இராமபிரானது அழகிய திருவடிகளை, (தனது மனத்தால் நினைத்து) வணங்கி்த் துதித்து; விசும்பிடை கடிது போனான் - ஆகாய வழியாக விரைவில் சென்றான். (1) 6008. | மைந்நாகம்என்ன நின்ற குன்றையும், மரபின் எய்தி, கைந் நாகம்அனையோன் உற்றது உணர்த்தினன், கணத்தின் காலை, பைந் நாகம்நிகர்க்கும் வீரர் தன் நெடு வரவு பார்க்கும், கொய்ந் நாகம்நறுந் தேன் சிந்தும், குன்றிடைக் குதியும் கொண்டான். |
கை நாகம்அனையோன் - துதிக்கையை உடைய யானை போன்றவனான அனுமன்; மைநாகம் என்ன நின்ற குன்றையும் - மை நாகம் என்று சொல்லப் படுகின்ற இடை நின்ற மலையையும்; மரபின் எய்தி உற்றது உணர்த்தினன் - (முன் அதனிடம் சொல்லி வந்த) முறைப்படி அடைந்து, இலங்கையில் நடந்த நிகழ்ச்சிகளை அதனிடம் கூறி; கணத்தின் காலை தன் நெடும் வரவு பார்க்கும் - ஒரு கணப் பொழுதிலே, நெடு நேரமாகத் தனது வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்; பை நாகம் நிகர்க்கும் - படம் எடுத்து எழுந்து நோக்கும் பாம்பு போன்ற; வீரர் - அங்கதன் முதலிய வானரவீரர்கள் நின்ற; கொய் நாகம் நறுந்தேன் சிந்தும் குன்றிடை - பறித்துஎடுக்கக் கூடிய சுர புன்னை மரங்களின் மலர்கள் |