6010. | அழுதனர்சிலவர்; முன் நின்று ஆர்த்தனர் சிலவர்; அண்மித் தொழுதனர்சிலவர்; ஆடித் துள்ளினர் சிலவர்; அள்ளி முழுதுறவிழுங்குவார்போல் மொய்த்தனர் சிலவர்; முற்றும் தழுவினர்சிலவர்; கொண்டு சுமந்தனர் சிலவர், தாங்கி. |
சிலவர் அழுதனர்- (அனுமனைக் கண்ட அவ்வானர வீரர்களுள்) சிலர் மகிழ்ச்சியினால் அழுதார்கள்; சிலவர் முன் நின்று ஆர்த்தனர் - சிலர்அனுமனுக்கு முன்னாலே நின்று ஆரவாரித்தார்கள்; சிலவர் அண்மி தொழுதனர் - சிலர், (அனுமனை) நெருங்கி வணங்கினார்கள்; சிலவர் ஆடி துள்ளினர் - சிலர் குதித்துக் கூத்தாடினார்கள்; சிலவர் அள்ளி முழுது உற விழுங்குவார் போல் மொய்த்தனர் - சிலர் (அனுமனை) எடுத்து முழுவதும் விழுங்குபவர் போன்று (அவனை) நெருங்கிச் சூழ்ந்து கொண்டனர்; சிலவர் சுற்றும் தழுவினர் - சிலர் சுற்றிலும் அனுமனைஆலிங்கனஞ் செய்தார்கள்; சிலவர் தாங்கிக் கொண்டு சுமந்தனர் - சிலர்அனுமனைத் தாங்கித் தூக்கிச் சுமந்து கொண்டார்கள். அனுமனைக் கண்டவானர வீரர்களின் மகிழ்ச்சிச் செயல்கள் கூறப்பட்டன. (4) 6011. | ‘தேனொடு கிழங்கும் காயும் நறியன அரிதின் தேடி, மேல் முறைவைத்தேம்; அண்ணல் ! நுகர்ந்தனை, மெலிவு தீர்தி; மான வாள் முகமேநங்கட்கு உரைத்தது மாற்றம்’ என்று, தாம் நுகர்சாகம் எல்லாம் முறை முறை சிலவர் தந்தார். |
சிலவர் -சில வானரவீரர்கள்; அண்ணல் மானம் வாள் முகமே நங்கட்கு மாற்றம் உரைத்தது - (அனுமனை நோக்கி) பெரியோய் ! பெருமையும் ஒளியும் பொருந்திய உன் முகமே எங்களுக்கு (பிராட்டியைக் கண்ட நற்செய்தியாகிய) சொற்களைத் |