சூடாமணி பெற்றஇராமபிரான் நிலை 6053. | பை பையப்பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து பொங்கி, மெய்யுறவெதும்பி, உள்ளம் மெலிவுறு நிலையை விட்டான்; ஐயனுக்கு, அங்கி,முன்னர், அங்கையால் பற்றும் நங்கை கை எனல் ஆயிற்றுஅன்றே-கை புக்க மணியின் காட்சி ! |
கைபுக்க மணியின்காட்சி - (இராமபிரான்) கையில்புகுந்த அந்தச் சூடாமணியின் தோற்றம்; ஐயனுக்கு அங்கி முன்னர் - அந்த இராமபிரானுக்கு, (திருமணக் காலத்தில்) அக்கினி முன்னிலையில்; அம்கையால் பற்றும் நங்கை கைஎனல் ஆயிற்று - அழகிய கையினால் பிடிக்கப்பட்ட பிராட்டியின் கையைப் போல விளங்கியது; (ஆதலின்) பயந்த காமம் பைபைய பரிணமித்து உயர்ந்து பொங்கி - (அதனால்) உண்டான ஆசை உணர்ச்சி மெல்ல மெல்ல வளர்ந்து மேன்மேல் எழுதலால்; மெய் உற வெதும்பி - உடல் நன்றாய் வெப்பமுற்று; உள்ளம் மெலிவுறும் நிலையை விட்டான் - மனம் தளர்ச்சியடைகின்ற தன்மையை நீக்கினான். சூடாமணியைஇராமபிரான் தன் கையில் கொண்டமை, தன் திருமணக்காலத்தில் பிராட்டியின் கையைப் பற்றியது போன்றிருந்தது. அம்மகிழ்ச்சியினால், ஆசையால் வளர்ந்த மனத் துன்பம் நீங்கிற்று என்பதாம். (47) 6054. | பொடித்தனஉரோமம்; போந்து பொழிந்தன கண்ணீர்; பொங்கித் துடித்தன,மார்பும் தோளும்; தோன்றின வியர்வின் துள்ளி; மடித்தது, மணிவாய்; ஆவி வருவது போவது ஆகித் தடித்தது, மேனி;என்னே, யார் உளர் தன்மை தேர்வார் ? |
உரோமம்பொடித்தன - (இராமபிரானுக்கு)மயிர்கள் சிலிர்த்தன; கண்ணீர் போந்து பொழிந்தன - கண்ணீர் வழிந்து பெருகின; மார்பும் தோளும் பொங்கி துடித்தன - மார்பும் |