தோள்களும்பூரித்துத்துடித்தன; வியர்வின் துள்ளி தோன்றின - வியர்வையின் துளிகள் உண்டாயின; மணிவாய் மடித்தது - அழகிய வாய் இதழ் மடிப்புண்டது; ஆவி வருவது போவது ஆகி மேனி தடித்தது - உயிர்வருவதும் போவதும் ஆகப் பெற்று உடல் பூரித்தது; என்னே ! - என்னவியப்பு; தன்மை தேர்வார் யார் உளர் ? - அப்போது இராமபிரான் அடைந்த நிலைமையை ஆராய்ந்து அறியவல்லார் யாரே உள்ளார் ? (ஒருவரும் இல்லை என்பதாம்,) இராமபிரானுக்குஅப்பொழுது நேர்ந்த மெய்ப்பாடுகளைத் தெரிந்து உணர்த்துவது எம்மனோர்க்கு இயலாது என்றபடி. துள்ளி - துளி. (48) மேலே செய்வனகுறித்து இராமன் விரைதல் 6055. | ஆண்டையின், அருக்கன் மைந்தன், ‘ஐய ! கேள், அரிவை நம்பால் காண்டலுக்குஎளியள் ஆனாள்’ என்றலும், ‘காலம் தாழ, ஈண்டு, இனும்இருத்தி போலாம்’ என்றனன்; என்றலோடும், தூண் திரண்டனையதோளான், பொருக்கென எழுந்து சொன்னான். |
ஆண்டையின்அருக்கன் மைந்தன் - அப்பொழுது சூரியன்மகன் சுக்கிரீவன்; ஐய ! கேள் - (இராமபிரானை நோக்கி) ஐயனே ! கேட்டருள்வீராக!; அரிவை நம்பால் காண்டலுக்கு எளியள் ஆனாள் என்றலும் - பிராட்டி, நாம் நம்மிடம் அழைத்துக் கொணர்தற்கு, எளிய தன்மையில் உள்ளாள் என்று சொன்ன அளவில்; காலம் தாழ ஈண்டு இனும் இருத்தி போலாம் என்றனன் - வீணே காலம் தாமதமாக, இங்கேயே இருக்கின்றாய் போலும் ! என்று சொன்னான்; என்ற லோடும் - என்ற சொன்னவுடனே; தூண் திரண்டு அனைய தோளான் பொருக்கென எழுந்து சொன்னான் - தூண் திரண்டிருப்பது போன்ற தோள்களை உடைய சுக்கிரீவன் விரைவில் எழுந்திருந்து கட்டளையிடுபவனானான். பொருக்கென - விரைவுக்குறிப்பு. (49) |