பக்கம் எண் :

858சுந்தர காண்டம்

வானர சேனைபுறப்படுதல்

6056.

‘எழுக, வெம் படைகள் !’ என்றான்; ‘ஏ’ எனும்
                           அளவில், எங்கும்
முழு முரசு எற்றி,கொற்ற வள்ளுவர் முடுக்க, முந்தி,
பொழி திரைஅன்ன வேலை புடை பரந்தென்னப்
                            பொங்கி,
வழுவல் இல்வெள்ளத் தானை, தென் திசை
                         வளர்ந்தது அன்றே !

     வெம் படைகள்ஏ எனும் அளவில் எழுக என்றான் - கொடிய
சேனைகள் எல்லாம் ‘ஏ’ உச்சரிக்கும் கால அளவுக்குள் புறப்படுவனவாக
என்று சுக்கிரீவன் கட்டளையிட்டான்; கொற்றவள்ளுவர் எங்கும் முழு முரசு
எற்றி முடுக்க -
வெற்றியை உடைய முரசு அறைவோர், சேனைகள் உள்ள
எல்லா இடத்திலும் பெரிய முரசுகளை அடித்து விரைவுபடுத்த; முந்தி பொழி
திரை அன்ன வேலை புடைபரந்தென்ன பொங்கி தென்திசை வளர்ந்தது
-
பின்னடையாத (எழுபது) வெள்ளம் கொண்ட வானரச் சேனைகள், விரைந்து
பாய்கின்ற அலைகளை உடைய அந்தக் கடல், தான் இருக்கும் நிலையை
விட்டு வெளியிலே பரவினால் போல எழுந்து தெற்குத்திக்கை நோக்கிப்
பரவலாயிற்று.

     வள்ளுவர் - முரசுஅறைவோர்.                             (50)

வீரர் எளிதில்வழி நடத்தல் 

6057.

வீரரும் விரைவில் போனார்; விலங்கல் மேல்
                          இலங்கை, வெய்யோர்
பேர்வு இலாக்காவற்பாடும், பெருமையும், அரணும்,
                          கொற்றக்
கார் நிறத்துஅரக்கர் என்போர் முதலிய, கணிப்பு
                          இலாத,
வார் கழல்அனுமன் சொல்ல, வழி நெடிது எளிதின்
                          போனார்.

     விரைவில்போனார் வீரரும் - விரைவில்புறப்பட்டவர்களாகிய
வானரவீரர்கள் எல்லோரும்; வார் கழல் அனுமன் - நீண்ட வீரக்கழலை
உடையஅனுமன்; விலங்கல் மேல் இலங்கை -