பக்கம் எண் :

திருவடி தொழுத படலம்859

திரிகூடம் என்னும்மலையின் மீதுள்ள இலங்கையில் வாழ்கின்ற; கொற்றம்
கார் நிறத்து அரக்கர் என்போர் வெய்யோர் -
வெற்றியையும் கரிய
நிறத்தையும் உடைய அரக்கர்கள் என்று சொல்லப்படும் கொடியவர்கள்
செய்யும்; பேர்வு இலா காவல் - பெயர்தல் இல்லாத காவல்; பாடும் -
செய்யும் திறமும்; பெருமையும் - சிறப்பும்; அரணும் - கோட்டை முதலிய
அரண்களும்; முதலிய - முதலான; கணிப்பு இலாத - அளவில்லாத
பெருமைகளை எல்லாம்; சொல்ல - அவர்களுக்கு எடுத்துச் சொல்லிக்
கொண்டுவர; நெடிது வழி எளிதின் போனார் - நீண்ட வழியை எளிதாகக்
கடந்து போனார்கள்.                                         (51)

பன்னிரு நாளில்அனைவரும் தென்கடல் சேர்தல் 

6058.

அந் நெறிநெடிது செல்ல, அரிக் குலத்து
                           அரசனோடும்,
நல் நெறிக்குமரர் போக, நயந்து உடன் புணர்ந்த
                           சேனை,
இன் நெடும்பழுவக் குன்றில் பகல் எலாம் இறுத்த
                            பின்னர்,
பன்னிரு பகலில்சென்று, தென் திசைப் பரவை
                            கண்டார்.

     அந்நெறி நெடிதுசெல்ல - அந்த வழி நீண்டு செல்வதால்;
அரிக்குலத்து அரசனோடும் நல் நெறிக்குமரர் போக - குரங்குக்
கூட்டத்துக்கு அரசனாகிய சுக்கிரீவனுடன் நல்வழியைப் பின்பற்றுபவர்களாகிய
இராம இலக்குவர் செல்ல; நயந்து உடன் புணர்ந்த சேனை - விரும்பிக் கூட
வந்த வானரச் சேனைகள் எல்லாம்; இன் நெடும் பழுவம் குன்றில் பகல்
எலாம் இறுத்த பின்னர் -
இனிய நீண்ட சோலைகளை உடைய
மலைவழியில்பகல் பொழுது முழுவதையும் கழித்த பிறகு; பன்னிருபகலில்
சென்று -
பன்னிரண்டாம் நாளில் போய்; தென் திசைப் பரவை கண்டார் -
தெற்குத்திக்கில் உள்ள கடலைக் கண்டார்கள்.

      சென்ற வழிநீண்டு கொண்டிருந்தமையால், சேனை பன்னிரண்டாம்
நாளில், தென் திசைக்கடலைச் சென்று அடைந்தது. இராம இலக்குவர்
சுக்கிரீவனுடன் சென்றனர் என்பதாம். ‘பகல் எலாம்’ - பகல் நேரம்;
பன்னிருபகல் - பன்னிரண்டு நாள்.                            (52)