பக்கம் எண் :

மிகைப் பாடல்கள்861

385.

பெருஞ் சிலம்பு அறையின் வாழும் பெரு வலி
                         அரக்கர் யாரும்
பொரும் சின மடங்கல் வீரன் பொதுத்திட
                         மிதித்தலோடும்
அருஞ் சினம்அடங்கி, தம்தம் மாதரைத் தழுவி,
                         அங்கம்
நெரிஞ்சுற,கடலின் வீழ்ந்தார், நெடுஞ் சுறா மகரம்
                         நுங்க

     அனுமன் திருவடி ஊன்றநிலை குலைந்த அரக்கர் தம்மாதரைத்
தழுவிக்கடலில் விழுந்தனர். பொதுத்திட - துளை உண்டாக. நுங்க - உண்ண.
நெரிஞ்சுற - சிதைவுற.                                        (7-1)

386.

விண்ணோர்அது கண்டனர், உள்ளம் வியந்து
                          மேல்மேல்
கண் ஓடியநெஞ்சினர், காதல் கவற்றலாலே,
எண்ணோடு இயைந்துதுணை ஆகும் இயக்கி ஆய
பெண்ணோடு இறைஇன்னன பெற்றி
                          உணர்த்தினாரால்.

     தேவர்கள்,அனுமன் செல்வதைக் கண்டனர். சுரசையைப் பார்த்து
கூறினர். கண் ஓடிய - இரக்கமுற்ற.                          (64-1)

387.

பரவுக் குரல், பணிலக் குரல், பணையின் குரல்,
                           பறையின்
விரவுக் குரல்,சுருதிக் குரல், விசயக் குரல், விரவா,
அரவக் குலம்உயிர் உக்கு உக, அசனிக் குரல் அடு
                           போர்
உரவுக் கருடனும் உட்கிட, உயிர்க்கின்றன-ஒருபால்.

     பல ஒலிகள்உண்டாகின்றன. பணிலம் - சங்கு. பணை - முரசம்,
அசனி- இடி. உயிர்த்தல் - ஒலித்தல்.                        (74-1)

388.

வானோர் பசுந் தருவின் மா மலர்கள் தூவ,
ஏனோரும் நின்று,‘சயம் உண்டு’ என இயம்ப,
தான் ஓர் பெருங்கருடன் என்ன, எதிர் தாவிப்
போனான்,விரைந்து, கடிதே போகும் எல்லை.

     பசுந்தரு -கற்பகம்.                                   (74-2)